ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | நேருக்கு நேர் மோதும் சந்தானம், சூரி படங்கள்! | தமிழ் மொழிக்கான பெருமைச்சின்னம்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு | கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தை இயக்கும் பா.ரஞ்சித்! | காரில் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்! சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்! | புதிய வருடம் புதிய லைப் - ‛தக்லைப்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகிறது! | மாரியம்மன் கோவில் விழாவில் பாட்டு பாடி நடனமாடிய ரம்யா நம்பீசன்! | பிளாஷ்பேக்: கதையால் ஈர்க்கப்பட்டு “காவியத் தலைவி”யான நடிகை சவுகார் ஜானகி | சிம்பு 49வது படத்தில் இணைந்த சாய் அபியன்கர்! | தனுஷ், விக்னேஷ் ராஜா படம் கைவிடப்பட்டதா? |
ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லி தொடர்ந்து விஜய்யை வைத்து அடுத்தடுத்து மூன்று வெற்றி படங்களை இயக்கி அதன் மூலம் பாலிவுட்டில் நடிகர் ஷாரூக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கும் வாய்ப்பையும் பெற்றார். அந்த வகையில் பாலிவுட்டிலும் ஆயிரம் கோடி வசூல் செய்த வெற்றி படமாக ஜவானை மாற்றினார் அட்லீ. மேலும் இந்த படத்தின் மூலம் அனிருத், விஜய்சேதுபதி, நயன்தாரா, யோகிபாபு ஆகியோரையும் தன்னுடன் பாலிவுட்டுக்கு அழைத்துச் சென்றார் அட்லீ.
இதில் படத்தின் கதாநாயகி நயன்தாராவுக்கு அடுத்தபடியாக மிக முக்கியமான ஒரு வீராங்கனை கதாபாத்திரத்தில் நடிகை பிரியாமணி நடித்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் பிரியாமணியை எப்போதுமே அட்லீ, புலி அல்லது புலி மணி என்று தான் அழைப்பாராம். படத்தின் கதையை அட்லீ சொன்ன அந்த முதல்நாளில் இருந்து ஜாலியாக பழக ஆரம்பித்ததுடன் படப்பிடிப்பு நாட்களில் எப்போதுமே இந்த பெயரை தான் கூறி தான் பிரியாமணியை அழைப்பாராம் அட்லீ. மீண்டும் அட்லீயுடன் இணைந்து பணியாற்றுவீர்களா என்ற கேள்வி சமீபத்தில் அவரிடம் கேட்கப்பட்டபோது இந்த தகவலை கூறியுள்ளார் பிரியாமணி.