பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

சந்தானம் நடித்து 2017ல் வெளிவந்த 'சக்க போடு போடு ராஜா' படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் வைபவி சாண்டில்யா. அதன்பின் தமிழில் 'இருட்டு அறையில் முரட்டு குத்து, கேப்மாரி' ஆகிய படங்களில் நடித்தார். மராத்தி, தெலுங்கு, கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார். கடந்த வருடம் வெளிவந்த பான் இந்தியா கன்னடப் படமான 'மார்ட்டின்' படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.
ஹர்ஷவர்தன் என்பவரைத் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளார் வைபவி சாண்டில்யா. திருமணப் புகைப்படத்தைப் பகிர்ந்து, “எங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆசீர்வாதங்களுடன், ஹர்ஷவர்தனும் நானும் அன்பு மற்றும் ஒற்றுமையின் இந்த அழகான பயணத்தைத் தொடங்கி உள்ளோம். அனைவரின் அன்புக்கும், ஆதரவிற்கும் நன்றி, வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சி,” என்று குறிப்பிட்டுள்ளார்.
புதுமணத் தம்பதியினருக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.