ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்யுங்க : ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி | கட்டுப்படுத்த முடியவில்லை, நிறைய பரோட்டா சாப்பிட்டேன் : நித்யா மேனன் | இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் குவித்த ‛எப் 1' | இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி |
சந்தானம் நடித்து 2017ல் வெளிவந்த 'சக்க போடு போடு ராஜா' படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் வைபவி சாண்டில்யா. அதன்பின் தமிழில் 'இருட்டு அறையில் முரட்டு குத்து, கேப்மாரி' ஆகிய படங்களில் நடித்தார். மராத்தி, தெலுங்கு, கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார். கடந்த வருடம் வெளிவந்த பான் இந்தியா கன்னடப் படமான 'மார்ட்டின்' படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.
ஹர்ஷவர்தன் என்பவரைத் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளார் வைபவி சாண்டில்யா. திருமணப் புகைப்படத்தைப் பகிர்ந்து, “எங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆசீர்வாதங்களுடன், ஹர்ஷவர்தனும் நானும் அன்பு மற்றும் ஒற்றுமையின் இந்த அழகான பயணத்தைத் தொடங்கி உள்ளோம். அனைவரின் அன்புக்கும், ஆதரவிற்கும் நன்றி, வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சி,” என்று குறிப்பிட்டுள்ளார்.
புதுமணத் தம்பதியினருக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.