மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
கன்னட நடிகர் சிவராஜ் குமார் கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். சமீபத்தில் வெளிவந்த ஜெயிலர், கேப்டன் மில்லர் ஆகிய படங்களின் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமாகி உள்ளார். தற்போது சப்த சாகரதாச்சே எல்லோ சைட் ஏ, பி படங்களின் வெற்றி இயக்குநர் ஹேமந்த் ராவ் உடன் இணைந்து புதிய படத்தில் சிவராஜ் குமார் நடிக்கவுள்ளார். இப்படம் பெரிய பொருட்செலவில் உருவாகும் வரலாற்று படம் என கூறப்படுகிறது.
இயக்குநர் ஹேமந்த் ராவ் கூறியதாவது, ‛‛ஒரு நடிகராக சிவராஜ்குமாரின் அனுபவம் மிகப்பெரியது. அவர் தனது முழு வாழ்க்கையிலும் மாறுபட்ட பல பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். ஒரு இயக்குநராக என்னையும், அவரையும் உற்சாகப்படுத்தும் ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். அவருடன் பணியாற்றுவது எனக்கு கிடைத்திருக்கும் ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு'' என்றார்.
விரைவில் மற்ற அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியாக உள்ளன.