தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' |
கன்னட நடிகர் சிவராஜ் குமார் கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். சமீபத்தில் வெளிவந்த ஜெயிலர், கேப்டன் மில்லர் ஆகிய படங்களின் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமாகி உள்ளார். தற்போது சப்த சாகரதாச்சே எல்லோ சைட் ஏ, பி படங்களின் வெற்றி இயக்குநர் ஹேமந்த் ராவ் உடன் இணைந்து புதிய படத்தில் சிவராஜ் குமார் நடிக்கவுள்ளார். இப்படம் பெரிய பொருட்செலவில் உருவாகும் வரலாற்று படம் என கூறப்படுகிறது.
இயக்குநர் ஹேமந்த் ராவ் கூறியதாவது, ‛‛ஒரு நடிகராக சிவராஜ்குமாரின் அனுபவம் மிகப்பெரியது. அவர் தனது முழு வாழ்க்கையிலும் மாறுபட்ட பல பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். ஒரு இயக்குநராக என்னையும், அவரையும் உற்சாகப்படுத்தும் ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். அவருடன் பணியாற்றுவது எனக்கு கிடைத்திருக்கும் ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு'' என்றார்.
விரைவில் மற்ற அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியாக உள்ளன.