‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா நடித்த 'ரெய்டு' படம் வருகிற 10ம் தேதி வெளிவருகிறது. இதன் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னதாக படம் பற்றி விக்ரம் பிரபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :
'டாணாக்காரன்' படத்திற்கு பிறகு நடிக்க ஒப்புக் கொண்ட படம் இது. ஏற்கெனவே 'புலிகுத்தி பாண்டி' படத்தில் இயக்குனர் முத்தையாவுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். 'வெள்ளக்கார துரை' படத்தில் ஸ்ரீதிவ்யாவுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். தற்போது நாங்கள் மூவரும் இணைந்திருக்கிறோம். இது சிவராஜ்குமார் நடித்த 'தகரு' என்ற கன்னட படத்தின் ரீமேக். இதற்காக அந்த படத்தை பார்த்தேன். சிவராஜ்குமார் மாஸ் ஹீரோ என்பதால் அவர் ஸ்டைலில் நடித்திருந்தார். நான் எனக்கு ஏற்ற வகையில் அந்த கேரக்டரை மாற்றிக் கொண்டேன். எந்த விதத்திலும் அவரை காப்பி அடிக்கவில்லை. அடிக்கவும் முடியாது.
டாணாக்காரன் படத்திற்கு பிறகு போலீஸ் வேடங்களாகவே வந்தது. அதை தவிர்த்து வந்தேன். இந்த படத்தின் கதை பிடித்திருந்ததால் ஒப்புக் கொண்டேன். தமிழுக்காக சின்ன சின்ன மாற்றங்களை செய்திருக்கிறோம். கடைசியாக நடித்த 'இறுகப்பற்று' படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக இது இருக்கும் என்றார்.