நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

விலங்குகளிலேயே அதிக அறிவு கொண்டது குரங்கு. அது மனிதனை போன்றே சிந்திக்கவும், பேசவும் ஆரம்பித்தால் என்ன ஆகும் என்ற ஒரு கேள்வியில் உருவானது 'பிளானட் ஆப் தி ஏப்ஸ்' படங்கள். 1968ம் ஆண்டில் முதல் படம் உருவானது. அதன்பிறகு வெவ்வேறு டைட்டில்களில் 3 படங்கள் வந்தன. 2011ம் ஆண்டு மீண்டும் நவீன தொழில்நுட்பத்தில் உருவான படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன்பிறகு பல்வேறு தலைப்புகளில் இதுவரை 3 பாகங்கள் வெளிவந்துள்ளன. தற்போது இதன் 4வது பாகம் 'கிங்டம் ஆப் தி பிளானட் ஆப் தி ஏப்ஸ்' என்ற பெயரில் வெளிவருகிறது.
இந்த பாகத்தில் மனிதர்களிடம் தனது தனி ராஜ்யத்தை இழந்த ஏப்ஸ்கள். மனிதர்களுக்கு அடிமையாக வேலை செய்கிறது. மனிதர்களிடமிருந்து விடுதலை அடைந்து மீண்டும் தங்களது சாம்ராஜ்யத்தை (கிங்டம்) எப்படி நிறுவுகிறார்கள் என்பதுதான் கதை. தற்போது இதன் டிரைலர் ஆங்கிலம் மட்டுமல்லாது இந்தியாவில் ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. படத்தை வெஸ் பால் இயக்கியுள்ளார். ஓவன் டீக் , ப்ரேயா ஆலன், கெவின் டுராண்ட் , பீட்டர் மேகன் மற்றும் வில்லியம் ஹெச்.மேசி ஆகியோர் அனிமேஷன் கேரக்டர்களுக்கு உருவமும், குரலும் கொடுத்துள்ளனர்.
டுவன்டின்த் செஞ்சுரி ஸ்டுடியோஸ் இந்திய திரையரங்குகளில் படத்தை வெளியிடுகிறது. அடுத்த ஆண்டின் துவகத்தில் வெளியாகும் என்று தெரிகிறது. இந்தியாவில் ஆங்கிலம் தவிர்த்து ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் வெளியாகிறது. 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்திலும் வெளியாகிறது.