'தக் லைப்' படத்தில் இடம் பெற்ற 'அமானுஷ்யன்' நாவலின் சில பகுதிகள் | 'அகண்டா 2' படத்தில் வில்லனாக ஆதி | காஞ்சனா 4 படத்தின் நிலவரம் என்ன? | மீண்டும் படம் இயக்கி நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்! | சின்னத்திரை நடிகை கண்மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | அதிர்ச்சி கொடுத்த 'தக்லைப்' படத்தின் ஐந்தாவது நாள் வசூல்! | தமன்னா நடிக்கும் 'விவான்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது! | வனிதா விஜயகுமாரின் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்ட ரஜினிகாந்த்! | தக் லைப் : திட்டமிட்டதற்கு முன்பாகவே ஓடிடி ரிலீஸ்? | 7 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் விஜய் யேசுதாஸ் |
ஸ்லம் டாக் மில்லியனர் படத்திற்காக சிறந்த சவுண்டு இன்ஜினியர் பிரிவில் ஆஸ்கர் விருது வாங்கியவர் கேரளாவை சேர்ந்த ரசூல் பூக்குட்டி. அதை தொடர்ந்து தென்னிந்தியா மட்டும் அல்லாது பாலிவுட்டிலும் மிகப்பெரிய படங்களில் பணியாற்றி வருகிறார். அந்த வகையில் பிரித்திவிராஜ் நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள விரைவில் வெளியாக இருக்கும் ஆடுஜீவிதம் என்கிற படத்திலும் இவர் சவுண்ட் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இயக்குனர் பிளஸ்சி இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் இருந்து ஏ.ஆர் ரஹ்மானின் பின்னணி இசை குறித்து கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள ரசூல் பூக்குட்டி, ஏ.ஆர் ரஹ்மானை மேஸ்ட்ரோ என்றும் குறிப்பிட்டுள்ளார். இசை மேதைகளை மேஸ்ட்ரோ என்று குறிப்பிடுவது சரிதான் என்றாலும் ரசிகர்களை பொருத்தவரை, ஏன் இந்திய அளவில் மேஸ்ட்ரோ என்றால் அது இளையராஜா ஒருவரை மட்டுமே குறிக்கும். இந்த விஷயம் தெரிந்தும் ரசூல் கூட்டி இவ்வாறு குறிப்பிட்டது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து இசை ரசிகர்கள் பலரும் கலவையாக விமர்சனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.