ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் நடிக்க தொடங்கிய போது அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் ஆகிய இருவருக்கும் இடையே காதல் உருவாகி, அந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பே அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். கடந்த செப்டம்பர் மாதம் அவர்களது திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் அசோக் செல்வனைப் போலவே கீர்த்தி பாண்டியனும் சினிமாவில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அசோக் செல்வன் - மேகா ஆகாஷ் இணைந்து நடித்துள்ள சபாநாயகன் என்ற படம் வருகிற டிசம்பர் 15ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. அதேபோல், கீர்த்தி பாண்டியன் கதையின் நாயகியாக நடித்திருக்கும் கண்ணகி என்ற படமும் அதே நாளில் திரைக்கு வருகிறது. இப்படி ஒரே நாளில் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் ஆகிய இருவரும் நடித்த படங்கள் மோதிக் கொள்வதால் பாக்ஸ் ஆபீஸில் யாருடைய படம் வெற்றி பெறப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.