தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' |

தமிழ் சினிமாவில் 'தும்பா' என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகர் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன். அதன் பிறகு 'கண்ணகி' என்ற படத்தில் நடித்தவர், 'ப்ளூ ஸ்டார்' படத்தில் அசோக் செல்வனுடன் இணைந்து அந்த படத்தில் நடித்த போது அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டு அப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள்.
இந்த நிலையில் கீர்த்தி பாண்டியன் அளித்துள்ள ஒரு பேட்டியில், தனது கணவர் அசோக் செல்வன் பற்றி கூறுகையில், ''மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய நல்ல மனதை கொண்டவர். சொந்த வாழ்க்கையோ, சினிமா துறையோ, எதுவாக இருந்தாலும் உண்மையாக இருப்பார். மன உறுதியுடன் செயல்படுவார். அதோடு வீட்டில் இருக்கும் போது கிச்சனுக்குள்ளும் புகுந்து விடுவார். சமைப்பது, பாத்திரங்கள் கழுவுவது என நான் செய்யும் அனைத்து வேலைகளையும் அவரும் எடுத்துக் கொண்டு செய்வார். அந்த அளவுக்கு பெண்களை மதிக்கக்கூடிய ஒரு நல்ல மனம் கொண்டவர் அசோக் செல்வன்,'' என்று தனது கணவரை பெருமையாக கூறியுள்ளார் கீர்த்தி பாண்டியன்.




