''சகுனிகள் நிறைந்த உலகம்; நல்லவனா இருந்தா பிழைக்க முடியாது'' - ரஜினி பேச்சு | பிளாஷ்பேக் : ராஜா என்னை மன்னித்துவிடு... கைவிடப்பட்ட கமல் - ருத்ரைய்யா படம் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 9 படங்களில் நடித்த சிவாஜி | இடைவெளிக்குப் பின் படப்பிடிப்பில் அனுஷ்கா | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழாவில் சிரஞ்சீவிக்கு விருது: அமிதாப் வழங்குகிறார் | வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது |
தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் 'ராஜாவின் பார்வையிலே' என்ற படத்தில் விஜய் நாயகனாக நடிக்க, இரண்டாவது ஹீரோவாக அந்த படத்தில் நடித்திருந்தார் அஜித். அதன் பிறகு ஒரு கட்டத்தில் இரண்டு பேருமே தமிழ் சினிமாவில் முக்கிய ஹீரோக்கள் ஆகிவிட்ட நிலையில், எதிரும் புதிருமான போட்டியாளர்களாக இருந்தார்கள்.
இதன் காரணமாக விஜய் படங்கள் வெளியாகும் போது அஜித் ரசிகர்களும், அஜித் படங்கள் வெளியாகும்போது விஜய் ரசிகர்களும் எதிர்மறையான கருத்துக்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் அவ்வப்போது சலசலப்பை ஏற்படுத்திக் கொண்டே வந்தார்கள். ஆனால் தற்போது தனது 69வது படத்தோடு விஜய் அரசியலுக்கு செல்லபோவதால் இதுவரை அவருக்கு எதிராக கருத்து பதிவிட்ட அஜித்தின் ரசிகர்கள், இப்போது அவரை பெருமைப்படுத்தும் வகையில் கமெண்டுகளை கொடுத்து வருகிறார்கள்.
அதை போன்று வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்த 'தி கோட்' படத்தில் அஜித்தின் வசனத்தை விஜய் பேசி நடித்திருந்த நிலையில், தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தான் நடித்து வரும் 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் பிரபலமான வசனம் ஒன்றை தான் பேசி நடிக்கிறாராம் அஜித் குமார். என்னதான் தொழில் ரீதியாக இருவரும் போட்டியாளராக இருந்த போதும், தனிப்பட்ட முறையில் நண்பர்கள் என்பதால் விஜய் மீதான தனது அன்பை வெளிப்படுத்தும் வகையில் இப்படி அவரது வசனத்தை தான் பேசி நடிக்கப் போகிறாராம் அஜித் குமார்.