சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
அறிமுக இயக்குனர் அருள்செழியன் இயக்கத்தில், அந்தோணிதாசன் இசையமைப்பில், யோகிபாபு, விதார்த் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் 'குய்கோ'. இப்படத்தைப் பார்த்த பத்திரிகையாளர்கள் மிகவும் பாராட்டினர். படத்திற்கான விமர்சனங்களும் பாராட்டும்படியே வந்தது.
ஆனால், படத்தின் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்கும் வேலையை சரியாகச் செய்யவில்லை. கடந்த வாரம் 24ம் தேதி வெளியான இப்படத்தின் வெளியீடு பற்றிய அறிவிப்பை அதற்கு சில நாட்களுக்கு முன்பு 21ம் தேதிதான் வெளியிட்டார்கள். இப்படி ஒரு படம் வந்தது பலருக்கும் தெரியவில்லை. தமிழகத்தின் பல முக்கிய ஊர்களில் கூட இப்படம் வெளியாகவில்லை.
இந்நிலையில் படத்தின் இயக்குனரான அருள்செழியன் நேற்று அவரது பேஸ்புக்கில், “குய்கோ திரைப்படத்தை ஆதரித்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி...
ரசிகர்களின் ஆதரவு இருந்தும், பாராட்டுகள் குவிந்தும் குய்கோவை தயாரித்த நிறுவனத்தினர் அதை வலுக்கட்டாயமாக 'பீரிசர் பாக்சில்' வைத்து ஆணி அடித்து, உயிரோடு அஞ்சலிக்கு வைத்து விட்டார்கள்..
'குய்கோ'விற்கு என் வீர வணக்கம்..
பிகு : துணை நின்ற அனைத்து நண்பர்களுக்கும் நன்றி பதிவு மூன்றாம் நாள் காரியம் முடிந்ததும் வெளியிடப்படும். . …,” என தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார். பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.