ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
‛இம்சை அரசன் 23 ஆம் புலிக்கேசி' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிம்புதேவன். அதைத் தொடர்ந்து பல படங்களை இயக்கிய அவர், கடைசியாக 2021ம் ஆண்டு வெளிவந்த ‛கசடதபற' திரைப்படத்தை இயக்கினார். அதைத் தொடர்ந்து யோகி பாபு நடிப்பில் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் 'போட்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்திய சுதந்திரம் வாங்குவதற்கு 80 ஆண்டுகளுக்கு முன் நடக்கும் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் போட் மேனாக யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் எம்.எஸ் பாஸ்கர், கவுரி கிஷன், சின்னி ஜெயந்த், மதுமிதா ஆகியோரும் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 2ல் படம் வெளியாகிறது.
இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடைப்பெற்றது. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர். அவ்விழாவில் யோகி பாபு 3 மணி நேரம் தாமதமாக வந்து கலந்துக் கொண்டார். அவர் நேர தாமதம் ஆனதுக்கு அனைவரிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொண்டார். குற்றாலத்தில் மற்றொரு படப்பிடிப்பில் இருந்ததால் அங்கிருந்து வர தாமதம் ஆனது என்றார்.
ஆனாலும் செய்தியாளர் ஒருவர், தாமதமாக வந்தது பற்றியே விடாமல் கேள்வி கேட்டார். இதனால் சற்று கடுப்பான யோகிபாபு அவரைப் பார்த்து, ‛மைக் ஆப் பண்ணிட்டு வெளியே வா சொல்றேன்' என சொடக்குப் போட்டு சொல்லிவிட்டு கிளம்பி சென்றார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.