Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

காந்தாரா 2 படப்பிடிப்பில் படகு விபத்து நடந்ததா? : தயாரிப்பாளர் தரப்பு விளக்கம்

18 ஜூன், 2025 - 07:42 IST
எழுத்தின் அளவு:
Was-there-a-boat-accident-during-the-filming-of-Gandhara-2-Producers-explanation

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு கன்னடத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் காந்தாரா. ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த இந்த திரைப்படம் பின்னர் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் கூட கவனம் ஈர்த்தது. இதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகம் காந்தாரா சாப்டர் 1 என்கிற பெயரில் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த படம் துவங்கப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு உள்ளாகவே படப்பிடிப்பில் விரும்பத்தகாத சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற நடித்து வந்த இரண்டு மலையாள துணை நடிகர்கள் வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது எதிர்பாராத விதமாக உயிரிழந்தனர். குறிப்பாக கடந்த ஒரு வாரத்துக்குள்ளாகவே மலையாள நடிகர் ஒருவரின் மரணம் நிகழ்ந்த அதிர்வு அடங்குவதற்குள்ளாகவே தற்போது காந்தாரா 2 படப்பிடிப்பின் போது அவர்கள் பயன்படுத்திய படகு நீரில் மூழ்கியது என்றும் அதிர்ஷ்டவசமாக எந்த உயிர் சேதமும் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

படத்தில் அந்த படகு ஒரு கதாபாத்திரமாகவே இடம்பெறுகிறது என்றும் அதேசமயம் படப்பிடிப்பு உபகரணங்கள் சில தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அப்படி விபத்து எதுவும் நடக்கவில்லை என்று படத்தின் தயாரிப்பு நிர்வாகி விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, “படக்குழுவினர் படகில் சென்றபோது விபத்து நடந்ததாக கூறுவதில் எந்த உண்மையையும் இல்லை. சொல்லப்போனால் விபத்தே நடக்கவில்லை. அங்கிருந்த ஒரு நீர்த்தேக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு ஒன்று அதிக காற்றின் காரணமாக தண்ணீரில் கவிழ்ந்தது. அந்த படகு கூட எங்களது படத்தில் இடம்பெறும் விதமாக இல்லை. நாங்கள் படப்பிடிப்பு நடத்தியபோது பின்னணியில் அந்த படகு இருந்தது. அவ்வளவுதான். இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக வெளியான தகவலிலும் உண்மை இல்லை. தொடர்ந்து படபிடிப்பு நடைபெற்று வருகிறது” என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
“மஞ்சுவாரியரை அறிமுகப்படுத்த அவரது தந்தை என்னிடம் வாய்ப்பு கேட்டார்” : நெகிழ்ந்த ஊர்வசி“மஞ்சுவாரியரை அறிமுகப்படுத்த அவரது ... விடாமல் துரத்திய போட்டோகிராபர்கள் : கோபமான சமந்தா விடாமல் துரத்திய போட்டோகிராபர்கள் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in