மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு | 30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் |
ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் தனி ஒருவன். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை மீண்டும் ஜெயம் ரவியை வைத்து இயக்கப் போவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார் மோகன் ராஜா. அந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
இந்தநிலையில் தற்போது மோகன் ராஜா வெளியிட்டுள்ள இன்னொரு செய்தியில், கடந்த 2004 ஆம் ஆண்டு ஜெயம் ரவி, அசின், நதியா நடிப்பில் தான் இயக்கிய எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தின் இரண்டாம் பாகத்தையும் அடுத்து இயக்கப் போவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
அதோடு அப்படத்தின் முதல் பாகத்தில் நதியா கேரக்டர் இறந்துவிடும் என்பதால் இந்த இரண்டாவது பாகத்தில் அவர் இல்லாமல் கதை தொடரும் என்றும் கூறும் மோகன் ராஜா, தனி ஒருவன் இரண்டாம் பாகத்தை அடுத்து, எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவும் திட்டமிட்டுள்ளாராம்.