காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
2015ல் மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படம் ‛தனி ஒருவன்'. நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்த இந்த படத்தில் அரவிந்த்சாமி வில்லனாக நடித்திருந்தார். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருந்தார். அது மட்டுமல்ல முதன்முறையாக ரீமேக் என்கிற ஏரியாவில் இருந்து வெளியே வந்து தனியாக கதையை உருவாக்கி வெற்றி வாகை சூடினார் இயக்குனர் மோகன்ராஜா. இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வரவேற்பு பெற்றன. குறிப்பாக ஜெயம் ரவி, நயன்தாரா இணைந்து நடித்த கண்ணால கண்ணால என்கிற பாடல் ரசிகர்களின் பேவரைட் பாடலாக மாறியது. இந்த பாடலை ஹிப் ஹாப் ஆதியே எழுதி இருந்தார்.
இந்த படம் வெளியாகி 8 வருடங்கள் கழிந்த நிலையில் தற்போது 100 கோடி பார்வையாளர்களால் இந்த பாடல் பார்க்கப்பட்டு புதிய சாதனையை செய்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தகவலை பகிர்ந்து கொண்டுள்ள இயக்குனர் மோகன்ராஜா, "இதுதான் இந்தப் படத்திற்காக எனக்கு நீங்கள் மேற்கொண்ட முதல் பணி. அப்போது இந்த பாடலைக் கேட்டுவிட்டு நான் எவ்வளவு ஸ்தம்பித்து போய் நின்றேன் என்பது உங்களுக்கு தெரியும்' என்று பழைய நினைவுகளை குறிப்பிட்டு படத்தின் இசையமைப்பாளரும், இந்த படத்தின் பாடலாசிரியருமான ஹிப் ஹாப் ஆதிக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.