மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
2015ல் மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படம் ‛தனி ஒருவன்'. நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்த இந்த படத்தில் அரவிந்த்சாமி வில்லனாக நடித்திருந்தார். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருந்தார். அது மட்டுமல்ல முதன்முறையாக ரீமேக் என்கிற ஏரியாவில் இருந்து வெளியே வந்து தனியாக கதையை உருவாக்கி வெற்றி வாகை சூடினார் இயக்குனர் மோகன்ராஜா. இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வரவேற்பு பெற்றன. குறிப்பாக ஜெயம் ரவி, நயன்தாரா இணைந்து நடித்த கண்ணால கண்ணால என்கிற பாடல் ரசிகர்களின் பேவரைட் பாடலாக மாறியது. இந்த பாடலை ஹிப் ஹாப் ஆதியே எழுதி இருந்தார்.
இந்த படம் வெளியாகி 8 வருடங்கள் கழிந்த நிலையில் தற்போது 100 கோடி பார்வையாளர்களால் இந்த பாடல் பார்க்கப்பட்டு புதிய சாதனையை செய்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தகவலை பகிர்ந்து கொண்டுள்ள இயக்குனர் மோகன்ராஜா, "இதுதான் இந்தப் படத்திற்காக எனக்கு நீங்கள் மேற்கொண்ட முதல் பணி. அப்போது இந்த பாடலைக் கேட்டுவிட்டு நான் எவ்வளவு ஸ்தம்பித்து போய் நின்றேன் என்பது உங்களுக்கு தெரியும்' என்று பழைய நினைவுகளை குறிப்பிட்டு படத்தின் இசையமைப்பாளரும், இந்த படத்தின் பாடலாசிரியருமான ஹிப் ஹாப் ஆதிக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.