ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
'லியோ' படத்தில் நடித்து முடித்த பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் தன்னுடைய 68வது படத்தில் நடிக்க உள்ளார் நடிகர் விஜய். நேற்று வெங்கட் பிரபுவின் டுவிட்டர் தளத்தில், “ஆக, அடுத்து என்ன… நாளை காலை 11 மணி வரை காத்திருங்கள்,” என்று பதிவிட்டிருந்தார்.
ரசிகர்கள் பலரும் அது விஜய்யின் 68வது படம் பற்றி ஏதாவது ஒரு அப்டேட் ஆக இருக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தார்கள். ஆனால், அது 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' என்ற வேறொரு படம் பற்றிய அறிவிப்பாக இருந்தது. வெங்கட் பிரபுவின் அன்பளிப்பு என அப்படத்தைப் பற்றி வெங்கட் பிரபு குறிப்பிட்டிருந்தார்.
அந்தப் பதிவில் ரசிகர் ஒருவர், “விஜய் 68 படம் பற்றிய அப்டேட் என நினைத்தேன், இருந்தாலும், வாழ்த்துகள்” என்று கமெண்ட் செய்திருந்தார். அதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு, “விஜய் 68 அறிவிப்பு, சும்மா தெறிக்கும், காத்திருங்கள்,” என்றார்.