மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
'லியோ' படத்தில் நடித்து முடித்த பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் தன்னுடைய 68வது படத்தில் நடிக்க உள்ளார் நடிகர் விஜய். நேற்று வெங்கட் பிரபுவின் டுவிட்டர் தளத்தில், “ஆக, அடுத்து என்ன… நாளை காலை 11 மணி வரை காத்திருங்கள்,” என்று பதிவிட்டிருந்தார்.
ரசிகர்கள் பலரும் அது விஜய்யின் 68வது படம் பற்றி ஏதாவது ஒரு அப்டேட் ஆக இருக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தார்கள். ஆனால், அது 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' என்ற வேறொரு படம் பற்றிய அறிவிப்பாக இருந்தது. வெங்கட் பிரபுவின் அன்பளிப்பு என அப்படத்தைப் பற்றி வெங்கட் பிரபு குறிப்பிட்டிருந்தார்.
அந்தப் பதிவில் ரசிகர் ஒருவர், “விஜய் 68 படம் பற்றிய அப்டேட் என நினைத்தேன், இருந்தாலும், வாழ்த்துகள்” என்று கமெண்ட் செய்திருந்தார். அதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு, “விஜய் 68 அறிவிப்பு, சும்மா தெறிக்கும், காத்திருங்கள்,” என்றார்.