பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு |
'பாரதி கண்ணம்மா' தொடர் மூலம் புகழ் பெற்றவர் வினுஷா. இந்த தொடர் முடிந்த உடனேயே அவருக்கு 'பிக் பாஸ்' வாய்ப்பு கிடைத்தது. டைட்டில் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். 'பிக் பாஸ்' வீட்டிற்குள் தான் அவமானப்படுத்தப்பட்டதாக தற்போது கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நான் விரும்பித்தான் சென்றேன். ஆனால் நினைத்து சென்றது வேறு, நடந்தது வேறு. உடன் இருந்தவர்கள் நடந்து கொண்ட விதம் என்னை காயப்படுத்தியது. எனக்கு முன்னால் கேலி கிண்டல் செய்தவர்களை விட பின்னால் செய்தவர்கள் அதிகம். குழுவாக பிரிந்து சண்டையிட்டுக் கொள்வது சகஜமானது. ஆனால் இந்த முறை தனிப்பட்ட முறையில் விமர்சித்தார்கள். கன்டென்ட் வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்கிறார்கள்.
பலரும் என்னை மட்டம் தட்டி எனக்குப் பின்னால் பேசியதால் உண்மையில் நான் மன அழுத்தத்திற்கு ஆளாகி விட்டேன். அதனால் அமைதியாகி விட்டேன். பிக்பாஸ் என்ற விளையாட்டையும் தாண்டி என்னுடைய மனநலன் முக்கியம் என்று நினைத்தேன். ஆனாலும், அந்த விளையாட்டில் என் முழு திறமையைக் காட்ட முடியாமல் போனது வருத்தம்தான். தற்போது வெளியில் வந்ததும் நிம்மதியை உணர்கிறேன். என்கிறார் வினுஷா.