மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் | 10 மில்லியன் வியூஸ் - தமன்னா சாதனையை முறியடிப்பாரா பூஜா ஹெக்டே | விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா | தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் | சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் | பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' |
தமிழ் சினிமா உலகில் கடந்த ஓரிரு வாரங்களாக, ஜெயம் ரவி அவரது மனைவி ஆர்த்தியின் பிரிவு விவகாரம்தான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயம் ரவி தன் பிரிவு பற்றி ஒரு அறிக்கை வெளியிட, அதற்கடுத்து அவரது மனைவி ஆர்த்தியும் ஒரு அறிக்கை வெளியிட சமூக வலைத்தளங்களில் இதைப் பற்றிப் பலரும் பலவிதமாகக் கமெண்ட் செய்து வந்தார்கள்.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு 'பிரதர்' படத்திற்காக பத்திரிகையாளர்களை சந்தித்த ஜெயம் ரவி, அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய சில விவரங்களையும் பகிர்ந்து கொண்டார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கின் 'லாகின்' விவரங்கள் கூட தன்னிடம் இல்லை. அதையும் மனைவி வீட்டார்தான் நிர்வகித்து வந்தார்கள் என்பதை மறைமுகமாகத் தெரியப்படுத்தினார்.
கடைசியாக ஆறு மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் பதிவு போட்டிருந்த ஜெயம் ரவி, அதன் பின் எந்த பதிவையும் போடவில்லை. தற்போது இன்ஸ்டாகிராம் நிறுவனத்தை அணுகி தன்னுடைய 'லாகின்' விவரங்களைப் பெற்றுள்ளார். இதையடுத்து நேற்று முதல் தனது அடுத்த படமான 'பிரதர்' பற்றிய சில பதிவுகளை அப்டேட் செய்துள்ளார். அந்தப் பதிவுகளிலும் ஜெயம் ரவி - ஆர்த்தி பிரிவு குறித்து பலரும் தொடர்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.