300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
பின்னணி பாடகி சுசித்ரா அவ்வப்போது சோசியல் மீடியாவில் சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் குறித்த சர்ச்சை வீடியோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அதிலும் மறைந்த இயக்குனர் பாலசந்தர் குறித்து அவர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தமிழ் திரையுலகினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதையடுத்து பலரும் அவருக்கு கண்டனங்களை தெரிவித்தார்கள். அதையடுத்து மணிமேகலை - பிரியங்கா விவகாரத்திலும் சர்ச்சை வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் சுசித்ரா. அதேபோல் இதற்கு முன்பு மலையாள நடிகை ரீமா கல்லிங்கல் போதை விருந்து நடத்தியதாகவும், அதில் இளம் பெண்களும், ஆண்களும் கலந்து கொண்டதாகவும் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தார்.
இந்த குற்றச்சாட்டை உடனடியாக மறுத்திருந்தார் ரீமா கல்லிங்கல். இந்நிலையில் தற்போது அவர் தன்னைப் பற்றி ஆதாரம் இல்லாத பொய்யான செய்திகளை பாடகி சுசித்ரா வெளியிட்டதாக சொல்லி அவர் மீது கொச்சின் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்திருக்கிறார். ஆன்லைன் மூலம் அவர் அளித்த இந்த புகார் மீதான நடவடிக்கையை எடுக்குமாறு எர்ணாகுளம் காவல் உதவி கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் பாடகி சுசித்ராவை கைது செய்து இந்த குற்றச்சாட்டு சம்பந்தமாக விசாரணை நடத்துவார்கள் என்று தெரிகிறது.