இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கடந்தாண்டு தெலுங்கில் வெளியான சீதா ராமம் என்ற படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர் ஹிந்தி நடிகை மிருணாள் தாக்கூர். அதன் பிறகு பேமிலி ஸ்டார், ஹாய் நன்னா போன்ற தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு விருது விழாவில், சீதாராமம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதினை பெற்றார் மிருணாள் தாக்கூர். அப்போது அவருக்கு அந்த விருதினை வழங்கிய தெலுங்கு நடிகர் அல்லு அரவிந்த், மிருணாள் தாக்கூர் கூடிய சீக்கிரமே தெலுங்கு மணமகனை திருமணம் செய்து கொண்டு, ஹைதராபாத்தில் செட்டிலாக வேண்டும் என்று மேடையில் பேசினார்.
அதையடுத்து, டோலிவுட்டில் மிருணாள் தாக்கூர் யாரோ தெலுங்கு நடிகரை காதலிக்கிறார். அதனால் தான் அல்லு அரவிந்த் அப்படி ஒரு செய்தியை வெளியிட்டார் என்று பல நடிகர்களுடன் அவரை இணைத்து பரபரப்பு செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில் அது குறித்து மிருணாள் தாக்கூர் ஒரு செய்தி வெளியிட்டு இருக்கிறார். அதில், நான் எந்த தெலுங்கு நடிகரையும் காதலிக்கவும் இல்லை, திருமணம் செய்து கொள்ளவும் இல்லை. அந்த விருது விழாவில் அல்லு அரவிந்த் விளையாட்டாக தான் அப்படி பேசினார். அதனால் இதை வைத்து ஆளாளுக்கு தெலுங்கு நடிகர்களுடன் என்னை இணைத்து செய்திகள் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார் மிருணாள் தாக்கூர்.