பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
கடந்தாண்டு தெலுங்கில் வெளியான சீதா ராமம் என்ற படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர் ஹிந்தி நடிகை மிருணாள் தாக்கூர். அதன் பிறகு பேமிலி ஸ்டார், ஹாய் நன்னா போன்ற தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு விருது விழாவில், சீதாராமம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதினை பெற்றார் மிருணாள் தாக்கூர். அப்போது அவருக்கு அந்த விருதினை வழங்கிய தெலுங்கு நடிகர் அல்லு அரவிந்த், மிருணாள் தாக்கூர் கூடிய சீக்கிரமே தெலுங்கு மணமகனை திருமணம் செய்து கொண்டு, ஹைதராபாத்தில் செட்டிலாக வேண்டும் என்று மேடையில் பேசினார்.
அதையடுத்து, டோலிவுட்டில் மிருணாள் தாக்கூர் யாரோ தெலுங்கு நடிகரை காதலிக்கிறார். அதனால் தான் அல்லு அரவிந்த் அப்படி ஒரு செய்தியை வெளியிட்டார் என்று பல நடிகர்களுடன் அவரை இணைத்து பரபரப்பு செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில் அது குறித்து மிருணாள் தாக்கூர் ஒரு செய்தி வெளியிட்டு இருக்கிறார். அதில், நான் எந்த தெலுங்கு நடிகரையும் காதலிக்கவும் இல்லை, திருமணம் செய்து கொள்ளவும் இல்லை. அந்த விருது விழாவில் அல்லு அரவிந்த் விளையாட்டாக தான் அப்படி பேசினார். அதனால் இதை வைத்து ஆளாளுக்கு தெலுங்கு நடிகர்களுடன் என்னை இணைத்து செய்திகள் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார் மிருணாள் தாக்கூர்.