கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி | பாலியல் குற்றச்சாட்டு : சைபர் கிரைமில் விஜய்சேதுபதி புகார் | முதல் நாளில் 39 கோடி வசூலித்த 'கிங்டம்' | ஆலியா பட், ரன்பீர் வசிக்கப் போகும் 250 கோடி புதிய பங்களா |
கடந்தாண்டு தெலுங்கில் வெளியான சீதா ராமம் என்ற படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர் ஹிந்தி நடிகை மிருணாள் தாக்கூர். அதன் பிறகு பேமிலி ஸ்டார், ஹாய் நன்னா போன்ற தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு விருது விழாவில், சீதாராமம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதினை பெற்றார் மிருணாள் தாக்கூர். அப்போது அவருக்கு அந்த விருதினை வழங்கிய தெலுங்கு நடிகர் அல்லு அரவிந்த், மிருணாள் தாக்கூர் கூடிய சீக்கிரமே தெலுங்கு மணமகனை திருமணம் செய்து கொண்டு, ஹைதராபாத்தில் செட்டிலாக வேண்டும் என்று மேடையில் பேசினார்.
அதையடுத்து, டோலிவுட்டில் மிருணாள் தாக்கூர் யாரோ தெலுங்கு நடிகரை காதலிக்கிறார். அதனால் தான் அல்லு அரவிந்த் அப்படி ஒரு செய்தியை வெளியிட்டார் என்று பல நடிகர்களுடன் அவரை இணைத்து பரபரப்பு செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில் அது குறித்து மிருணாள் தாக்கூர் ஒரு செய்தி வெளியிட்டு இருக்கிறார். அதில், நான் எந்த தெலுங்கு நடிகரையும் காதலிக்கவும் இல்லை, திருமணம் செய்து கொள்ளவும் இல்லை. அந்த விருது விழாவில் அல்லு அரவிந்த் விளையாட்டாக தான் அப்படி பேசினார். அதனால் இதை வைத்து ஆளாளுக்கு தெலுங்கு நடிகர்களுடன் என்னை இணைத்து செய்திகள் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார் மிருணாள் தாக்கூர்.