சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
நாக் அஷ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிக்க கடந்த ஆண்டில் வெளிவந்து 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'கல்கி 2898 ஏடி'.
இப்படத்தின் முதல் பாகத்தைப் படமாக்கிய போதே இரண்டாம் பாகத்திற்கான 60 சதவீத வேலைகளை முடித்துவிட்டதாகப் படத்தின் தயாரிப்பாளர் அஸ்வினி தத் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இருந்தாலும் மீதமுள்ள படத்திற்கான படப்பிடிப்பு எப்போது ஆரம்பமாகும் என்பது தெரியாமல் இருக்கிறது.
பிரபாஸ் தற்போது 'தி ராஜாசாப்' படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அதோடு 'பாஜி' படத்திலும் நடித்து வருகிறார். இவற்றிற்கு அடுத்து சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'ஸ்பிரிட்' படத்தில் நடிக்க உள்ளார். அடுத்தடுத்து அவர் புதிய படங்களில் நடிக்க உள்ளதால் 'கல்கி' இரண்டாம் பாகம் கைவிடப்பட்டதாக சிலர் வதந்திகளைப் பரப்பினார்கள். ஆனால், அவற்றை மறுத்துள்ளார் தயாரிப்பாளர் அஸ்வினி. விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது என்று கூறியுள்ளார்.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் 'சலார் 2' படத்தின் படப்பிடிப்பும் எப்போது ஆரம்பமாகும் என்பதும் தெரியாமல் உள்ளது. ஒரு பரபரப்புக்காக இரண்டாம் பாகம் என அறிவித்துவிடுகிறார்கள். ஆனால், குறித்த இடைவெளியில் அதை முடித்து வெளியிடாமல் இழுத்து வருகிறார்கள் என்பது திரையுலகினர், ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தருகிறது.