வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
அதிக விளம்பரத்தை விரும்பாமல் சினிமாவில் நடிப்பது தனது தொழில் என்கிற ரீதியில் எத்தனையோக கலைஞர்கள் வாழ்ந்து விட்டு போயிருக்கிறார்கள். அப்படியானவர்களில் ஒருவர் கே.ஆர்.இந்திராதேவி. பிரபல டப்பிங் கலைஞரான அனுராதாவின் மூத்த சகோதரி, ஜெயகீதாவின் தாய்.
1952ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிறந்தார். 14 வயதில், சென்னைக்கு வந்தார். நாடகக் குழுவில் சேர்ந்து, மேடை நாடகங்களில் நடிப்பைத் தொடங்கினார். பின்னர் அவர் திரைப்படத் துறையில் துணை நடிகையாகவும், டப்பிங் கலைஞராகவும் பணியாற்றினார். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
1959ல் 'கண் திறந்தது' என்னும் படத்தில் ஏ.கருணாநிதிக்கு ஜோடியாக நடித்தார். ஆர்.எஸ்.மனோகர் மற்றும் மனோரமா நடித்த 'கொஞ்சும் குமரி' என்னும் படத்தில் இவரும் மனோரமாவிற்கு இணையான கேரக்டரில் நடித்தார். 'பெற்றால் தான் பிள்ளையா' படத்தில் நம்பியாருக்கு ஜோடியாக நடித்தார். 'சுமைதாங்கி'யில் ஜெமினி கணேசனுக்கும், 'ஹலோ மிஸ்டர் ஜமீன்தார்' படத்தில் எம்.ஆர்.ராதாவிற்கும் ஜோடியாக நடித்தார்.
கடைசியாக 2005ம் ஆண்டு 'கிரிவலம்' படத்தில் நடித்தார். பின்னர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார். 2017ம் ஆண்டு தனது 70வது வயதில் காலமானார்.