சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
‛பிரேம்' படம் மூலம் அறிமுகமாகி இப்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சாய் பல்லவி. குறிப்பாக தெலுங்கு சினிமாவில் இவருக்கு அதிக வாய்ப்புகள் வருகின்றன. இருப்பினும் தனக்கான படத்தை தேர்ந்தெடுத்து மட்டுமே நடித்து வருகிறார். அடுத்து பாலிவுட்டிலும் கால்பதிக்க உள்ளார். அமீர்கான் படத்தில் இவர் நடிப்பதாக தகவல் வந்தது.
இந்நிலையில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் தந்தையும், தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த் ராமாயணத்தை படமாக ஹிந்தியில் தயாரிக்கப்போவதாக அறிவித்திருந்தார். இதை நிதேஷ் திவாரி இயக்குகிறார். இதில் ராமராக ரன்பீர் கபூர் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இப்போது சீதையாக சாய் பல்லவி நடிக்க போகிறாராம். அதேப்போன்று ராவணன் வேடத்தில் கேஜிஎப் புகழ் யஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை மூன்று பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ளனர். அடுத்தாண்டு படப்பிடிப்பு துவங்கி, முதல்பாகம் அடுத்தாண்டு இறுதியில் வெளியாகும் என கூறப்படுகிறது.