ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

‛பிரேம்' படம் மூலம் அறிமுகமாகி இப்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சாய் பல்லவி. குறிப்பாக தெலுங்கு சினிமாவில் இவருக்கு அதிக வாய்ப்புகள் வருகின்றன. இருப்பினும் தனக்கான படத்தை தேர்ந்தெடுத்து மட்டுமே நடித்து வருகிறார். அடுத்து பாலிவுட்டிலும் கால்பதிக்க உள்ளார். அமீர்கான் படத்தில் இவர் நடிப்பதாக தகவல் வந்தது.
இந்நிலையில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் தந்தையும், தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த் ராமாயணத்தை படமாக ஹிந்தியில் தயாரிக்கப்போவதாக அறிவித்திருந்தார். இதை நிதேஷ் திவாரி இயக்குகிறார். இதில் ராமராக ரன்பீர் கபூர் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இப்போது சீதையாக சாய் பல்லவி நடிக்க போகிறாராம். அதேப்போன்று ராவணன் வேடத்தில் கேஜிஎப் புகழ் யஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை மூன்று பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ளனர். அடுத்தாண்டு படப்பிடிப்பு துவங்கி, முதல்பாகம் அடுத்தாண்டு இறுதியில் வெளியாகும் என கூறப்படுகிறது.




