கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்ஜே சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛மார்க் ஆண்டனி'. இந்த படத்தின் ஹிந்தி பதிப்பை வெளியிட மும்பையில் உள்ள சென்சார் அதிகாரிகள் ரூ.6.5 லட்சம், லஞ்சம் பெற்றனர் என விஷால் புகார் கூறினார்.
இதுபற்றி பிரதமர் மோடி மற்றும் மகாராஷ்டிரா முதல்வரின் கவனத்திற்கும் கொண்டு சென்றார் விஷால். இதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்த மத்திய தகவல் ஒலிப்பரப்புதுறை அமைச்சகம், விஷாலின் புகார் குறித்து விசாரிக்க அதிகாரிகளை மும்பை அனுப்பி வைத்தது. உடன் நடவடிக்கை எடுத்ததற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார் விஷால்.
இந்நிலையில் சென்சார் போர்டு மீது விஷால் கூறிய லஞ்ச புகார் தொடர்பாக சிபிஐ., வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளது. இதுதொடர்பாக மெர்லின் மேனகா, தீஜா ராம்தாஸ், ராஜன் ஆகிய மூன்று அதிகாரிகளிடம் விசாரணை நடைபெறுகிறது.