சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
தெலுங்கு இளம் முன்னணி நடிகர் நாகசைதன்யா நடிப்பில் அடுத்ததாக வெளியாகும் விதமாக உருவாகி வரும் படம் 'தண்டேல்'. கதாநாயகியாக சாய்பல்லவி நடித்து வரும் இந்த படத்தை கார்த்திகேயா-2 புகழ் இயக்குனர் சந்து மொண்டேட்டி இயக்கி வருகிறார். அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் இந்த படத்தை தயாரித்து வருகிறார். கடற்கரையோர கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் நாகசைதன்யா ஒரு மீனவர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மீன் பிடிப்பதற்காக கடலுக்கு செல்லும் நாகசைதன்யா எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் நுழைந்து விட, அதன் பின் நடக்கும் விஷயங்களை வைத்து விறுவிறுப்பாக இந்த படம் உருவாகி வருகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நாகசைதன்யா, சாய்பல்லவி இருவரும் ஆயிரம் நடன கலைஞர்களுடன் ஆடிப்பாடும் விதமாக 'மகா சிவராத்திரி' பாடல் ஒன்று சமீபத்தில் படமாக்கப்பட்டது. இந்த பாடலை படமாக்குவதற்கு மட்டும் சுமார் ரூ.4 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படக்குழுவினர் இந்த பாடல் குறித்து கூறும்போது, “நாகசைதன்யா, சாய்பல்லவி ஆகியோரின் பிரமிக்கும் நடனத்தில் தேவி ஸ்ரீ பிரசாத்தின் அற்புதமான இசையில் இந்த பாடல் மிக ஸ்பெஷலானதாக இருக்கும். அது மட்டுமல்ல நீண்ட காலத்திற்கு இந்த பாடல் நினைவில் வைத்துக் கொள்ளப்படும்” என்று கூறியுள்ளனர்.