கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகி வரும் படம் ‛அயலான்'. ஏலியன் தொடர்பான கதையை மையமாக வைத்து சயின்ஸ் பிக் ஷன் படமாக தயாராகி வருகிறது. ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். 3 ஆண்டுகளாக இந்த படம் தயாரிப்பில் உள்ளது. வரும் தீபாவளிக்கு படம் ரிலீஸ் என அறிவித்திருந்தனர். ஆனால் பட பணிகள் முடியாததால் தள்ளிப்போவதாக ஒருவாரமாகவே செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் ‛அயலான்' படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர். படத்தில் கிராபிக்ஸ் தொடர்பான பணிகள் அதிகளவில் உள்ளதாம். அந்த பணிகள் முடியாததால் படத்தை தள்ளி வைத்துள்ளதாக சொல்கிறார்கள்.
இதனிடையே, ‛‛அயலான் பொங்கல் அன்று திரைக்கு வரவிருக்கிறது. உங்கள் மேலான ஆதரவை எதிர்நோக்கியிருக்கிறோம். நிச்சயம் அயலான் உங்களை மகிழ்விப்பான்,'' என இயக்குரனர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.