இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தென்னிந்திய திரையுலகில் குறிப்பாக தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணியில் உள்ள நட்சத்திரங்கள் ஒரே படத்தில் இணைந்து நடிப்பதை விரும்புவதில்லை. காரணம் யாருக்கு முக்கியத்துவம் அதிகம் என்கிற எண்ணம் சம்பந்தப்பட்ட ஹீரோக்களுக்கு ஏற்படாவிட்டாலும் கூட அவர்களது ரசிகர்களுக்குள் மோதல் ஏற்படும் என்பதற்காக தவிர்த்து வருகிறார்கள். அதேசமயம் பாலிவுட்டில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள் இப்படி மல்டி ஸ்டார் படங்களில் இணைந்து நடிப்பதை வரவேற்கவே செய்கிறார்கள்.
அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் ஷாரூக்கான் நடிப்பில் வெளியான பதான் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் எந்த ஈகோவும் பார்க்காமல் நடித்திருந்தார் சல்மான்கான். அப்படிப்பட்டவர்கள் ஒரு படத்தில் சம முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்க தயங்குவார்களா என்ன? அப்படி ஒரு படம் இவர்கள் இருவரது கூட்டணியில் விரைவில் உருவாக இருக்கிறது.
இந்த படத்திற்கு டைகர் வெர்சஸ் பதான் என டைட்டிலும் வைக்கப்பட்டுள்ளதாம்.. ஏற்கனவே சல்மான்கான் நடித்து ஹிட்டான டைகர் மற்றும் ஷாரூக்கான் நடிப்பில் ஹிட்டான பதான் என இரண்டு படங்களின் டைட்டிலையுமே இணைத்து மாஸ் டைட்டிலாக புதிய படத்திற்கு பெயர் வைத்துள்ளனர். பதான் படத்தை இயக்கிய சித்தார்த் ஆனந்த் தான் இந்த படத்தை இயக்க உள்ளார். வரும் மார்ச் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறதாம்.
மலையாளத்தில் இதேபோன்று மம்முட்டி நடித்த 'தி கிங்' மற்றும் சுரேஷ்கோபி நடித்த 'கமிஷனர்' ஆகிய படங்களில் டைட்டில்களை இணைத்து 'தி கிங் அண்ட் கமிஷனர்' என்கிற பெயரில் உருவான படத்தில் மம்முட்டி, சுரேஷ்கோபி இருவருமே இணைந்து நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.