ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தி கேரளா ஸ்டோரி என்ற படத்தை இயக்கியவர் சுதீப்டோ சென். இப்படத்தை விபுல் ஷா என்பவர் தயாரித்தார். இந்த படத்தில் 32 ஆயிரம் இந்து பெண்களை இஸ்லாம் மதமாற்றம் செய்து தீவிரவாதத்தில் ஈடுபடுத்தியதாக கதை உருவாக்கப்பட்டதால் பெரிய அளவில் சர்ச்சைகள் எழுந்தது. சில மாநிலங்களில் இந்த படத்தை வெளியிடுவதற்கும் தடை விதித்தார்கள். என்றாலும் இது புனையப்பட்ட கதை என்று இயக்குனர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்ததால், கருத்து சுதந்திர அடிப்படையில் இந்த படத்தை இந்தியா முழுக்க வெளியிடுவதற்கு அனுமதி வழங்கியது. இப்படம் 30 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு 200 கோடிக்கும் மேல் வசூலித்தது.
இந்த நிலையில் அடுத்தபடியாக இந்த கேரளா ஸ்டோரி படத்தின் இயக்குனர் சுதீப்டோ சென் என்பவர் இந்தியாவில் 50 ஆண்டுகளாக இயங்கி வரும் மாவோயிஸ்டுகள் பற்றிய கதையில் அடுத்த படத்தை இயக்குவதாக அறிவித்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டுள்ளார்.