என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

சமீபத்தில் வெளியாகி பரபரப்பையும், சர்ச்சைகளையும் கிளப்பிய படம் "தி கேரளா ஸ்டோரி". அடா சர்மா, சித்தி இத்னானி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தனர். கேரளாவில் பெண்களை மதமாற்றம் செய்து அவர்களை பயங்கரவாத அமைப்புகளில் சேர்த்துவிடுவது மாதிரியான கதைகளத்தில் வெளியானது. பல மாநிலங்களில் எதிர்ப்பு, சர்ச்சை, தடைகளை கடந்து இந்தப்படம் ரூ.200 கோடி வசூலை சந்தித்தது.
சித்தி இத்னானி அளித்த பேட்டி ஒன்றில் தி கேரளா ஸ்டோரி படத்தில் நடித்தது குறித்து பகிர்ந்துள்ளார். அதில், ''தி கேரளா ஸ்டோரி படத்தின் கதையை என்னிடம் கூறும்போது இது வழக்கமான கமர்ஷியல் சினிமா இல்லை என்பது புரிந்து இப்படம் வெளியாகும்போது எந்த மாதிரி பிரச்சினைகள் வரும் என்ற கேள்விகளும் என் மனதில் ஏற்பட்டது. இதே உணர்வில் தான் மற்றவர்களும் இருந்தார்கள். இதையெல்லாம் தாண்டி படத்தின் மையக்கரு பார்வையாளர்களுக்கு சென்றால் இந்த படத்தை எடுத்த நோக்கத்தை நிறைவேற்றும். இதனை ஆலோசித்தே படத்தில் நடிக்க சம்மதம் சொன்னேன்'' என்றார்.