ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாளத்தில் உருவான 'தி கேரள ஸ்டோரி' என்கிற படம் கடந்த வருடம் மே மாதம் வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பாவி இந்து பெண்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்றி வெளிநாட்டில் உள்ள ஐஎஸ்ஐ தீவிரவாதிகள் குழுவிற்கு அனுப்பி வைக்கும் கும்பலை பற்றிய ஒரு கதையாக உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த படம் உருவாகி இருந்தது. அதனால் இந்த படத்தை திரையிடுவதற்கு கேரளா, தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்தது. பல இடங்களில் போலீஸ் பாதுகாப்புடன் இந்த படம் திரையிடப்பட்டது. அதே சமயம் பல மாநிலங்களில் இந்த படத்திற்கு வரி விலக்கும் அளிக்கப்பட்டது.
இத்தகைய சர்ச்சையை, பரபரப்பை கிளப்பிய படத்தை சுதிப்தோ சென் என்பவர் இயக்கி இருந்தார். கதாநாயகியாக அடா சர்மா நடித்திருந்தார். சிறிய பட்ஜெட்டில் உருவாகி இருந்த இந்த படம் கிட்டத்தட்ட 200 கோடி வரை வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. இந்த நிலையில் இந்த படம் ஏப்., 5ல் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் என்கிற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதனைத் தொடர்ந்து இந்த படம் வெளியான போது கேரளாவில் இதை வெளியிட எதிர்ப்பு தெரிவித்த இரண்டு பிரதான கட்சிகளும் சில அமைப்புகளும் இந்த அறிவிப்புக்கு பலத்தை எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தேர்தல் நேரத்தில் இப்படி இந்த படத்தை தூர்தர்ஷனில் ஒளிபரப்புவது விதிகளை மீறிய செயல் என்றும் உண்மைக்கு புறம்பான செய்திகளை வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தை வெளியிடுவதன் மூலம் ஒரு அரசு நிறுவனமான தூர்தர்ஷன் பாஜக என்கிற கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று எதிர்க்கட்சியை சேர்ந்த பலரும் குற்றம் சாட்டினர். ஆனாலும் இந்த எதிர்ப்பை எல்லாம் மீறி நேற்று (ஏப்., 5) தூர்தர்ஷனில் இந்தப்படம் ஒளிபரப்பானது.