மருமகனுக்காக படம் தயாரிக்கும் விஜய் ஆண்டனி | ரஜினியே ரத்தத்தை நம்பி தான் படம் எடுக்கிறார் : ராதாரவி பேச்சு | இந்து தர்மத்தை சினிமாவில் சொல்வதை நினைத்து பெருமைப்படுகிறேன் : ‛ஹனுமன்' ஹீரோ | பார்வையாளர்களின் பதிலை மட்டுமே மதிக்கிறேன் : பல்லவி ஜோஷி | 100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? |
பஷில் ஜோசப் இயக்கத்தில், டொவினோ தாமஸ், குரு சோமசுந்தரம், பெமினா ஜார்ஜ் மற்றும் பலர் நடித்து 2021ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'மின்னல் முரளி'.
மின்னல் தாக்கியதால் கிடைத்த சக்தியை வைத்து படத்தின் நாயகனும், வில்லனும் என்ன செய்கிறார்கள் என்பதுதான் அப்படத்தின் கதை. அந்தப் படத்தைப் போலவே மின்னல் தாக்கியதால் கிடைக்கும் சக்தியை வைத்து நாயகன் என்ன செய்கிறான் என்பதுதான் 'வீரன்' படத்தின் கதை என்று மட்டும் படக்குழுவினர் இதுவரை தெரிவித்து வந்தார்கள். ஹிப்ஹாப் தமிழா, வினய், ஆதிரா ராஜ் மற்றும் பலர் நடிப்பில், எஆர்கே சரவண் இயக்கத்தில் இந்த வாரம் தமிழில் வெளிவர உள்ள படம்தான் 'வீரன்'.
'மின்னல் முரளி' படத்தின் ரீமேக்காகத்தான் 'வீரன்' படத்தை எடுத்துள்ளார்கள் என கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் கமெண்ட்டுகள் வந்தது. அதற்கு அப்டேட் கொடுக்கும் விதமாக இன்று மாலை 6 மணிக்கு படக்குழுவினர் அறிவிக்க உள்ளதாக அறிவித்தனர்.
அதன்படி மின்னல் முரளி இயக்குனர் பஷில் ஜோசப் உடன் ஆதி, எஆர்கே சரவண் ஆகியோர் வீடியோ காலில் பேசுவது போன்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் வீரன் பட டிரைலர் பார்த்தேன். மின்னல் முரளி போன்று இருப்பதாக கலாய்த்த பஷில் பின்னர் இரண்டு படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, படம் வெற்றி பெற வாழ்த்துகள் என தெரிவித்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதன்மூலம் 'மின்னல் முரளி' படத்தின் ரீமேக்கா 'வீரன்' என்பதற்கான விடையும் தெரிந்துவிட்டது.