டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

சார்பாட்டா பரம்பரை படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை துஷாரா விஜயன். இதை தொடர்ந்து நட்சத்திரம் நகர்கிறது, கழுவேத்தி மூர்கன் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், " நான் படங்களில் தேர்வு செய்து நடிப்பதில் எப்பொழுதும் கவனமாக இருப்பேன். நான் நடிக்கும் கதாபாத்திரம் எளிதில் என்னுடன் கனெக்ட் ஆக வேண்டும். 'கழுவேத்தி மூர்க்கன்' படத்தில் கவிதா என் மனதிற்கு நெருக்கமான கதாபாத்திரம்.
சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதாக அறிவித்துள்ளனர். அதில் நான் இருந்தால் சந்தோஷப்படுவேன். அழைப்புக்காக காத்திருக்கிறேன். அதேபோல் கதையும் கதாபாத்திரமும் எனது வசதிக்கு உட்பட்டு இருந்தால் கவர்ச்சியாக கூட நடிப்பேன். அதேபோல் அதிரடியாக சண்டை போடும் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளது. சில படங்களுக்கு எதிராக சர்ச்சைகள் எழுகின்றன. சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும்."
இவ்வாறு தெரிவித்துள்ளார்.




