'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
சார்பாட்டா பரம்பரை படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை துஷாரா விஜயன். இதை தொடர்ந்து நட்சத்திரம் நகர்கிறது, கழுவேத்தி மூர்கன் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், " நான் படங்களில் தேர்வு செய்து நடிப்பதில் எப்பொழுதும் கவனமாக இருப்பேன். நான் நடிக்கும் கதாபாத்திரம் எளிதில் என்னுடன் கனெக்ட் ஆக வேண்டும். 'கழுவேத்தி மூர்க்கன்' படத்தில் கவிதா என் மனதிற்கு நெருக்கமான கதாபாத்திரம்.
சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதாக அறிவித்துள்ளனர். அதில் நான் இருந்தால் சந்தோஷப்படுவேன். அழைப்புக்காக காத்திருக்கிறேன். அதேபோல் கதையும் கதாபாத்திரமும் எனது வசதிக்கு உட்பட்டு இருந்தால் கவர்ச்சியாக கூட நடிப்பேன். அதேபோல் அதிரடியாக சண்டை போடும் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளது. சில படங்களுக்கு எதிராக சர்ச்சைகள் எழுகின்றன. சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும்."
இவ்வாறு தெரிவித்துள்ளார்.