இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
சின்னத்திரை நடிகை சம்யுக்தா நடிகர் விஷ்ணுகாந்தை காதலித்து திருமணம் செய்து இரண்டு மாதங்களிலேயே பிரிந்துவிட்டார். இதனை தொடர்ந்து சோஷியல் மீடியாவில் இருவரும் மாறி மாறி குற்றம் சொல்லி வந்தனர். ஒருகட்டத்தில் விஷ்ணுகாந்த் தனக்கு வந்த ஆடியோவை ஊடகத்தில் வெளியிட்டு சம்யுக்தா செய்த தவறுகளை அம்பலபடுத்தினர். அந்த ஆடியோவின் மூலம், சம்யுக்தா ஒரே சமயத்தில் இரண்டுபேரை காதலிப்பது போல் பேசியதும், விஷ்ணுகாந்தை ஏமாற்றியதும் அம்பலமானது.
தற்போது அந்த ஆடியோ வைரலாகி வரும் நிலையில் சிலர் சம்யுக்தாவிற்கும் சிலர் விஷ்ணுகாந்திற்கு சப்போர்ட் செய்து பேசி வருகின்றனர். அந்த ஆடியோ குறித்து தற்போது பேசியுள்ள சம்யுக்தா அண்ணன் என்று நம்பி அவரிடம் இதையெல்லாம் சொன்னேன். அவர் மிகவும் கேவலமாக நடந்து கொண்டார் என்று கூறியுள்ளார். மேலும், அந்த ஆடியோவில் சம்யுக்தாவிடம் பேசி அதை விஷ்ணுகாந்திற்கு அனுப்பியது 'நாம் இருவர் நமக்கு இருவர்' இயக்குநர் ஹரீஸ் என்பதும் தெரியவந்துள்ளது.