‛தளபதி கச்சேரி' பிளாஸ்ட் : ‛ஜனநாயகன்' முதல் பாடல் வெளியீடு | கோவா திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛அமரன்' | ஜெயிலர் 2 படத்தை பாலகிருஷ்ணா எதனால் நிராகரித்தார்? | சைபர் கிரைம் மோசடி - ருக்மணி வசந்த் எச்சரிக்கை செய்தி | 2026 பிப்ரவரியில் திரைக்கு வரும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா | உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி |

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனை பொருத்தவரை ரசிகர்களுடன் சோசியல் மீடியாவில் எப்போதும் தொடர்பில் இருப்பவர். தன்னுடைய பர்சனல் விஷயங்கள், சினிமா தகவல்கள் அனைத்தையும் தன் கைப்படவே சோசியல் மீடியாவில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் தனது முகநூல் பக்கத்தில் பட்டு வேட்டி, சட்டை, அங்க வஸ்திரம் அணிந்து ஓணம் வாழ்த்துக்களை கூறியிருந்தார். ஆனால் ஓணம் பண்டிகை முடிந்து கிட்டத்தட்ட 10 நாட்கள் கழித்து அமிதாப் பச்சன் இப்படி வாழ்த்து சொன்னது ரசிகர்களிடம் குறிப்பாக மலையாளிகளிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இதன் காரணமாகவே பலரும் அமிதாப்பச்சனை கிண்டல் செய்து கமெண்ட் பதிவிட்டனர். அதாவது அமிதாப்பச்சனின் அட்மின் குழுவினர் ஓணம் பண்டிகையை மறந்து விட்டார்களோ என்றும், இல்லை கடந்த வருடம் செப்டம்பர் 14ம் தேதி ஓணம் பண்டிகை வந்ததால் அதை மனதில் வைத்து மறதியாக அமிதாப்பச்சன் இப்போது ஓணம் வாழ்த்துக்கள் சொல்லி இருக்கிறாரோ என்றும் கூட கிண்டலாக கருத்துக்களை வெளியிட்டனர்.
ஆனாலும் இதை கவனித்த அமிதாப் பச்சன் உடனடியாக தனது முகநூல் பக்கத்தில், “பண்டிகை கொண்டாட்டம் என்பது எப்போதுமே ஒரு கொண்டாட்டம் தான்.. அதற்கான மதிப்பும் மரியாதையும் ஒருபோதும் அழிவதில்லை. நான் எப்போதுமே என்னுடைய பதிவுகளை சொந்தமாகவே வெளியிடுகிறேன். எனக்கென யாரும் ஏஜென்ட் இல்லை.. இருந்தாலும் வருத்தப்படுகிறேன்” என்று கூறியுள்ளார்.