கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
நடிகர் நாகார்ஜுனாவின் மூத்த மகன் நாக சைதன்யா 'கஸ்டடி' படம் மூலம் தமிழிலும் அறிமுகமாக உள்ளார். வெங்கட் பிரபு இயக்க, இளையராஜா, யுவன்ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்கள்.
மே 12ம் தேதி தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று ஐதராபாத்தில் நடந்தது. அப்போது பேசிய இயக்குனர் வெங்கட் பிரபு, “என்னுடைய இயக்கத்தில் அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள படம் இது. தமிழில் என்னைப் பற்றி கடந்த பதினைந்து வருடங்களாக ரசிகர்களுக்குத் தெரியும். ஆனால், தமிழ் இயக்குனரான என்னைப் பற்றி இங்கு அவ்வளவாகத் தெரியாது, அதனால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பில்லை. அது எனக்கு சிறப்பானது. எனது முந்தைய படங்களைப் பார்க்காததால் இது என்ன மாதிரியான படமாக இருக்கும் என ஒரு எதிர்பார்ப்பு இருக்காது. தமிழ் ரசிகர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் மாறுபட்ட படமாக இருக்கும். இது ஒரு கடுமையான, ஆக்ஷன், எமோஷனல் படம்.
இப்படத்திற்கு 'சிவா' எனப் பெயர் வைக்கத்தான் திட்டமிட்டிருந்தேன். நாகார்ஜுனா சாரின் அந்த 'சிவா' படம் போல இந்தப் படமும் தீவிரமான ஒரு படமாக இருக்கும். ஆனால், நாகசைதன்யா அதை ஏற்கவில்லை. ''சிவா' படம் ஒரு கிளாசிக் படம். அந்தத் தலைப்பை எந்த ஒரு அழுத்தமான காரணமும் இல்லாமல் வைத்தால் ரசிகர்கள் நிச்சயம் நம்மைக் கொன்றுவிடுவார்கள் என்று சொன்னார்,” என வெங்கட் பிரபு கூறினார்.