'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திரைப்படங்களுக்கு இசை அமைப்பதற்கு இணையாக இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். அந்த வரிசையில் மாராட்டிய மாநிலம் புனேயில் அவரது இசை நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது. அங்குள்ள ராஜ் பகதூர் மில் வளாகத்தில் நடந்த இந்த இசை நிகழ்ச்சியை காண திரளான மக்கள் கூடியிருந்தனர்.
நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போது மேடைக்கு முன்னால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரி நிகழ்ச்சியை நிறுத்துமாறு சத்தமாக கூறினார். இதை கண்டு திடுக்கிட்ட ஏ.ஆர்.ரஹ்மான் எதற்காக என்பது போல் அந்த அதிகாரியை பார்க்க... அவர் இரவு 10 மணிவரைதான் இசை நிகழ்ச்சி மணி 10 ஆகிவிட்டது என்றார். தனது கை கடிகாரத்தை பார்த்த ரஹ்மான் புன்னகை செய்தபடியே நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார்.
“இசை நிகழ்ச்சி நடத்த இரவு 10 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அந்த நேரம் கடந்து விட்டதால் இசை நிகழ்ச்சியை நிறுத்துமாறு நாங்கள் கேட்டுக் கொண்டோம். உடனடியாக ஏ.ஆர்.ரஹ்மானும், அவரது குழுவினரும் இசை நிகழ்ச்சியை நிறுத்தி விட்டனர். எனவே வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை” என்று போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.