ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திரைப்படங்களுக்கு இசை அமைப்பதற்கு இணையாக இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். அந்த வரிசையில் மாராட்டிய மாநிலம் புனேயில் அவரது இசை நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது. அங்குள்ள ராஜ் பகதூர் மில் வளாகத்தில் நடந்த இந்த இசை நிகழ்ச்சியை காண திரளான மக்கள் கூடியிருந்தனர்.
நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போது மேடைக்கு முன்னால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரி நிகழ்ச்சியை நிறுத்துமாறு சத்தமாக கூறினார். இதை கண்டு திடுக்கிட்ட ஏ.ஆர்.ரஹ்மான் எதற்காக என்பது போல் அந்த அதிகாரியை பார்க்க... அவர் இரவு 10 மணிவரைதான் இசை நிகழ்ச்சி மணி 10 ஆகிவிட்டது என்றார். தனது கை கடிகாரத்தை பார்த்த ரஹ்மான் புன்னகை செய்தபடியே நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார்.
“இசை நிகழ்ச்சி நடத்த இரவு 10 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அந்த நேரம் கடந்து விட்டதால் இசை நிகழ்ச்சியை நிறுத்துமாறு நாங்கள் கேட்டுக் கொண்டோம். உடனடியாக ஏ.ஆர்.ரஹ்மானும், அவரது குழுவினரும் இசை நிகழ்ச்சியை நிறுத்தி விட்டனர். எனவே வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை” என்று போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.