நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் முயற்சி கடந்த 50 வருட காலத்திற்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில் இயக்குனர் மணிரத்னம் அந்த நாவலுக்கு உயிர் கொடுத்து அதை இரண்டு பாகங்கள் கொண்ட படமாக இயக்கியுள்ளார். கடந்த வருடம் செப்டம்பரில் அதன் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. வரும் ஏப்ரல் 28ல் இதன் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது. இந்த கதையில் இடம்பெறும் அனைத்து கதாபாத்திரங்களுமே முக்கியமானவை என்பதால் இதற்காக பார்த்து பார்த்து நட்சத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்துள்ளார் மணிரத்னம்.
அந்த வகையில் தற்போது இந்த இரண்டாம் பாகத்துக்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் மணிரத்னம். அப்படி ஒரு நிகழ்வில் அவரிடம், “இப்படி இரண்டு பாகங்களாக இந்த படத்தை எடுப்பதற்கு பதிலாக இதை ஒரு வெப்சீரிஸ் ஆக இயக்கியிருந்தால் உங்களுக்கு இன்னும் நிறைய சுதந்திரம் கிடைத்திருக்குமே ?” என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த மணிரத்னம், “உண்மைதான்.. ஆனால் அதற்கு நீண்ட காலம் பிடிக்கும் என்பதால் நடிகர்களின் தேதிகளை பெறுவது என்பது ரொம்பவே கடினமான வேலை.. அதனால் தான் திரைப்படமாக உருவாக்கி விட்டோம். ஐந்து பாகங்கள் கொண்ட பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு பாகங்கள் கொண்ட திரைப்படமாக மாற்றியதன் மூலம் அதற்கு நான் உரிய நியாயம் செய்திருக்கிறேனா என்று தெரியாது. ஆனால் நாவலை படமாக்கி விட்டோம் என்கிற திருப்தி எனக்கு இருக்கிறது” என்று கூறியுள்ளார்.