எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
இந்திய ரசிகர்களால் கிரிக்கெட்டின் கடவுளாகவே பார்க்கப்பட்ட, பாராட்டப்பட்ட கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உலக அளவிலும் அதே போன்று பெருமையை பெற்றவர். எந்த ஒரு பிரபலம் என்றாலும் அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் அதை தவற விட மாட்டார்கள். அப்படி நடிகர் சூர்யா, அவருடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை சமீபத்திய சோசியல் மீடியா சேட்டிங்கின்போது, சச்சினிடம் காட்டி இந்த சந்திப்பு குறித்து கூறுங்கள் என்று ரசிகர் ஒருவர் கேட்டிருந்தார்.
அவருக்கு பதில் அளித்த சச்சின், “நாங்கள் இருவருமே ஆரம்பத்தில் ரொம்பவே கூச்ச சுபாவத்துடன் இருந்தோம். மேலும் ஒருவரை ஒருவர் தொந்தரவு செய்ய வேண்டாமே என்றும் விரும்பினோம். ஆனால் போகப்போக அது ஒரு நல்ல உரையாடலாக மாறிய தருணமாக அமைந்தது” என்று கூறியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் சூர்யா சச்சினை நேரில் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.