ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் | ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊறும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் |

இந்திய ரசிகர்களால் கிரிக்கெட்டின் கடவுளாகவே பார்க்கப்பட்ட, பாராட்டப்பட்ட கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உலக அளவிலும் அதே போன்று பெருமையை பெற்றவர். எந்த ஒரு பிரபலம் என்றாலும் அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் அதை தவற விட மாட்டார்கள். அப்படி நடிகர் சூர்யா, அவருடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை சமீபத்திய சோசியல் மீடியா சேட்டிங்கின்போது, சச்சினிடம் காட்டி இந்த சந்திப்பு குறித்து கூறுங்கள் என்று ரசிகர் ஒருவர் கேட்டிருந்தார்.
அவருக்கு பதில் அளித்த சச்சின், “நாங்கள் இருவருமே ஆரம்பத்தில் ரொம்பவே கூச்ச சுபாவத்துடன் இருந்தோம். மேலும் ஒருவரை ஒருவர் தொந்தரவு செய்ய வேண்டாமே என்றும் விரும்பினோம். ஆனால் போகப்போக அது ஒரு நல்ல உரையாடலாக மாறிய தருணமாக அமைந்தது” என்று கூறியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் சூர்யா சச்சினை நேரில் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




