ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் பல படங்களில் நடித்திருந்தாலும் முதன்முறையாக தமிழில் ஒரு பக்க கதை என்கிற படத்தில் தான் கதாநாயகனாக அறிமுகமானார். அந்த படம் வெளியாக தாமதமான சூழ்நிலையில் அதைத்தொடர்ந்து சில படங்களில் நடித்தாலும் அவர் பெயர் சொல்லும் அளவிற்கு அமையவில்லை.
அதே சமயம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் கமலின் மகனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது அவரை வெகுவாக ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. இந்தநிலையில் தற்போது இந்தியன் 2 படத்தில் மீண்டும் கமலுடன் இணைந்து நடித்துள்ளார் காளிதாஸ் ஜெயராம்.
இந்த அனுபவம் குறித்து அவர் கூறும்போது, “கமல் சாருடன் இந்த படத்தில் மீண்டும் இணைந்து நடித்தது மகிழ்ச்சியான ஒன்று. அவருடன் நடிக்கும்போது நம்முடையை வீட்டிற்கு திரும்பி செல்வது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது.. அதுமட்டுமல்ல ஷங்கர் சாரின் படங்களை பார்த்து சிறுவயதிலிருந்தே வளர்ந்தவன் நான். இந்த இருவருடனும் ஒரே செட்டில் இணைந்து பணியாற்றிய அனுபவம் ஒவ்வொரு நாளும் ஒரு ரசிகனாகவே நான் மாறிய தருணமாக இருந்தது” என்று கூறியுள்ளார்..
நடிகர் கமல் கடந்த 35 வருடங்களுக்கு முன்பே மலையாளத்தில் ஜெயராமுடன் சாணக்யன் என்கிற படத்தில் இணைந்து நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து தமிழில் ஜெயராமுக்கு தன்னுடைய தெனாலி, பஞ்சதந்திரம், உத்தம வில்லன் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்கள் கொடுத்து நடிக்க வைத்தார். ஜெயராமை போலவே தற்போது அவரது மகன் காளிதாஸையும் கமல் அரவணைத்து செல்வது ஆச்சரியமான ஒன்றுதான்.