''சகுனிகள் நிறைந்த உலகம்; நல்லவனா இருந்தா பிழைக்க முடியாது'' - ரஜினி பேச்சு | பிளாஷ்பேக் : ராஜா என்னை மன்னித்துவிடு... கைவிடப்பட்ட கமல் - ருத்ரைய்யா படம் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 9 படங்களில் நடித்த சிவாஜி | இடைவெளிக்குப் பின் படப்பிடிப்பில் அனுஷ்கா | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழாவில் சிரஞ்சீவிக்கு விருது: அமிதாப் வழங்குகிறார் | வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது |
நயன்தாரா நடிக்கும் 75வது படத்தின் பூஜை நேற்று முன்தினம் நடைபெற்றது. அவருடன் ஜெய், சத்யராஜ், கே.எஸ். ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தை நீல் கிருஷ்ணா இயக்குகிறார். தமன் இசை அமைக்கிறார். சில தினங்களுக்கு முன்பு தங்களது குலதெய்வம் கோயிலுக்கு சென்று வழிபட்ட விக்னேஷ் சிவன்- நயன்தாரா தம்பதியினர், சாலை ஓரத்தில் உள்ள மக்களுக்கு உணவளித்து உள்ளனர். இருவரும் கொட்டும் மழையில் குடை பிடித்தபடி ஏழைகளுக்கு உணவு மற்றும் உடைகளை வழங்கி இருக்கிறார்கள். அது குறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது. இப்படி கொட்டும் மழையில் அவர்கள் ஏழைகளுக்கு உணவளிப்பதை பார்த்த நெட்டிசன்கள் அவர்களை பாராட்டி வருகிறார்கள்.