'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
நடிகர் விஜய் தனது ரசிகர்களை ஒன்றிணைக்கும் வகையில் மக்கள் இயக்கத்தை உருவாக்கி உள்ளார். அவ்வப்போது நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார். விஜய் மக்கள் இயக்கம் எதிர்காலத்தில் அரசியல் கட்சியாக மாற வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், தற்போது மன்ற நிர்வாகிகளுக்கு விஜய் பிறப்பித்துள்ள ஒரு உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது விஜய் மக்கள் இயக்க ஆலோசனை கூட்டம் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்பட வேண்டும். மாவட்டம், நகரம், ஒன்றியம் ஆகிய பகுதிகளில் உள்ள நிர்வாகிகள் அனைவரும் மாவட்ட அளவில் நடக்கும் கூட்டங்களில் பங்கேற்க வேண்டும். அதோடு விஜய் மக்கள் இயக்கத்தில் உள்ள மகளிர் அணி, விவசாய அணி உட்பட்ட அனைத்து அணிகளில் உள்ள நிர்வாகிகளும் மாவட்ட அளவில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்டு விஜய் மக்கள் இயக்கத்தின் எதிர்காலம் குறித்து ஆலோசனை செய்ய வேண்டும் என்று தற்போது விஜய் தனது மன்ற தலைவர் புஸ்ஸி ஆனந்த் மூலம் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார் . இது விஜய் மக்கள் இயக்கத்தை கட்டமைப்புடன் அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் முயற்சி என்றும் கூறப்படுகிறது.