கோவா சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது : பாலகிருஷ்ணாவுக்கு கவுரவம் | ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் |

நடிகர் விஜய் தனது ரசிகர்களை ஒன்றிணைக்கும் வகையில் மக்கள் இயக்கத்தை உருவாக்கி உள்ளார். அவ்வப்போது நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார். விஜய் மக்கள் இயக்கம் எதிர்காலத்தில் அரசியல் கட்சியாக மாற வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், தற்போது மன்ற நிர்வாகிகளுக்கு விஜய் பிறப்பித்துள்ள ஒரு உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது விஜய் மக்கள் இயக்க ஆலோசனை கூட்டம் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்பட வேண்டும். மாவட்டம், நகரம், ஒன்றியம் ஆகிய பகுதிகளில் உள்ள நிர்வாகிகள் அனைவரும் மாவட்ட அளவில் நடக்கும் கூட்டங்களில் பங்கேற்க வேண்டும். அதோடு விஜய் மக்கள் இயக்கத்தில் உள்ள மகளிர் அணி, விவசாய அணி உட்பட்ட அனைத்து அணிகளில் உள்ள நிர்வாகிகளும் மாவட்ட அளவில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்டு விஜய் மக்கள் இயக்கத்தின் எதிர்காலம் குறித்து ஆலோசனை செய்ய வேண்டும் என்று தற்போது விஜய் தனது மன்ற தலைவர் புஸ்ஸி ஆனந்த் மூலம் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார் . இது விஜய் மக்கள் இயக்கத்தை கட்டமைப்புடன் அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் முயற்சி என்றும் கூறப்படுகிறது.




