டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

ரஜினிகாந்தின் மகள்களான ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகிய இருவரும் படங்கள் இயக்கியுள்ள நிலையில், கமல்ஹாசனின் மகள்களான ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகிய இருவரும் திரைப்படங்களில் நடித்து வந்தார்கள். இவர்களில் ஸ்ருதிஹாசன் தற்போது பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் சலார் மற்றும் தி ஐ என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், எனக்கு கவிதை மட்டுமின்றி திரைக்கதைகள் எழுதுவதிலும் அதிகம் ஆர்வம். அதனால் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார். திரையுலகில் தான் ஒரு புதிய பயணத்தை எதிர்பார்த்து இருப்பதாகவும், திரைக்கதைகள், கவிதைகள் மற்றும் பாடல்கள் எழுதுவதில் தனக்கு விருப்பம் மிகுதியாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கும் ஸ்ருதிஹாசன், தற்போது ஒரு திரைப்படத்தின் முழு ஸ்கிரிப்ட்டை தயார் செய்யும் பணியில் தான் தீவிரமடைந்திருப்பதாக அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.
விரைவில் ஸ்ருதிஹாசனை இயக்குனராகவும் எதிர்பார்க்கலாம்.




