அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி | கல்லீரல் பிரச்னை: சனா ஆஸ்பத்திரியில் அட்மிட் | பிளாஷ்பேக் : ஹிந்தியில் ரீமேக் ஆன சிவகுமார் படம் | பிளாஷ்பேக் : மேற்கத்திய நடனங்களிலும் கலக்கிய லலிதா, பத்மினி | ஹீரோயின் ஆனார் முல்லை அரசி | வாரிசு: ஜீ தமிழில் புதிய தொடர் | முன்னோட்ட வீடியோவுடன் வருகிறது சிம்பு - வெற்றிமாறன் பட அறிவிப்பு | டிவி ஒளிபரப்பில் சாதனை படைத்த 'புஷ்பா 2' | முதல் முறையாக இரட்டை வேடத்தில் அதர்வா |
ரஜினிகாந்தின் மகள்களான ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகிய இருவரும் படங்கள் இயக்கியுள்ள நிலையில், கமல்ஹாசனின் மகள்களான ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகிய இருவரும் திரைப்படங்களில் நடித்து வந்தார்கள். இவர்களில் ஸ்ருதிஹாசன் தற்போது பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் சலார் மற்றும் தி ஐ என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், எனக்கு கவிதை மட்டுமின்றி திரைக்கதைகள் எழுதுவதிலும் அதிகம் ஆர்வம். அதனால் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார். திரையுலகில் தான் ஒரு புதிய பயணத்தை எதிர்பார்த்து இருப்பதாகவும், திரைக்கதைகள், கவிதைகள் மற்றும் பாடல்கள் எழுதுவதில் தனக்கு விருப்பம் மிகுதியாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கும் ஸ்ருதிஹாசன், தற்போது ஒரு திரைப்படத்தின் முழு ஸ்கிரிப்ட்டை தயார் செய்யும் பணியில் தான் தீவிரமடைந்திருப்பதாக அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.
விரைவில் ஸ்ருதிஹாசனை இயக்குனராகவும் எதிர்பார்க்கலாம்.