டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

கவுதம் கார்த்திக் நடித்துள்ள 1947 ஆகஸ்ட் 16 படத்தின் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த விழாவில் சிவகார்த்திகேயன் பேசியது “ ஏ. ஆர் முருகதாஸ் இயக்கிய ஏழாம் அறிவு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு நான் தான் ஸ்கிரிப்ட் பணிகளை செய்தேன். அடுத்ததாக ஏ.ஆர் முருகதாஸின் தயாரிப்பில் வெளிவந்த 'எங்கேயும் எப்போதும்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கினேன். இதையடுத்து அவர் தயாரித்த 'மான் கராத்தே' படத்தில் கதாநாயகனாக நடித்தேன். இன்று அவரது '1947 ஆகஸ்ட் 16' படத்திற்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கிறேன். ஆனால் இன்னும் அடுத்த கட்டம் உள்ளது அது விரைவில் நடக்கும்" என கூறியுள்ளார்.
சிவகார்த்திகேயனின் 25வது படத்தை ஏ.ஆர் முருகதாஸ் இயக்க உள்ளார் எனும் செய்தி சமூக வளைதளங்களில் பரவி வந்தது. அந்த படத்தை பற்றி தான் மறைமுகமாக கூறியுள்ளார் என்பது அவரது பேச்சிலும், விழாவில் கலந்து கொண்டதிலும் உறுதியாகியுள்ளது. இந்த படத்தை தாகூர் பிலிம்ஸ் தயாரிக்கின்றனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.




