மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜுன். தெலுங்கின் சீனியர் ஹீரோவான சிரஞ்சீவியின் மைத்துனரான அல்லு அரவிந்த்தின் இரண்டாவது மகன்.
அல்லு அர்ஜுன் குழந்தை நட்சத்திரமாக இரண்டு படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு 2003ல் வெளிவந்த 'கங்கோத்ரி' என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். தெலுங்கின் பிரபலமான இயக்குனராக கே ராகவேந்திர ராவின் 100வது படம் அது.
தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துள்ள அல்லு அர்ஜுன் தெலுங்கைத் தவிர மற்ற மொழிகளிலும் அவருக்கென ரசிகர்களை வைத்துள்ளார். தற்போது 'புஷ்பா' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.
கதாநாயகனாக 20 வருடங்களை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு, “இன்று, திரையுலகில் என்னுடைய 20 வருடங்களை நிறைவு செய்கிறேன். ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும், அன்பால் நனைந்தவனாகவும் இருக்கிறேன். திரையுலகத்தில் உள்ள அனைவருக்கும் எனது நன்றிகள். ரசிகர்கள், பார்வையாளர்கள், அபிமானிகளால் தான் நான் இப்படி இருக்கிறேன். என்றென்றும் நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.