புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜுன். தெலுங்கின் சீனியர் ஹீரோவான சிரஞ்சீவியின் மைத்துனரான அல்லு அரவிந்த்தின் இரண்டாவது மகன்.
அல்லு அர்ஜுன் குழந்தை நட்சத்திரமாக இரண்டு படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு 2003ல் வெளிவந்த 'கங்கோத்ரி' என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். தெலுங்கின் பிரபலமான இயக்குனராக கே ராகவேந்திர ராவின் 100வது படம் அது.
தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துள்ள அல்லு அர்ஜுன் தெலுங்கைத் தவிர மற்ற மொழிகளிலும் அவருக்கென ரசிகர்களை வைத்துள்ளார். தற்போது 'புஷ்பா' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.
கதாநாயகனாக 20 வருடங்களை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு, “இன்று, திரையுலகில் என்னுடைய 20 வருடங்களை நிறைவு செய்கிறேன். ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும், அன்பால் நனைந்தவனாகவும் இருக்கிறேன். திரையுலகத்தில் உள்ள அனைவருக்கும் எனது நன்றிகள். ரசிகர்கள், பார்வையாளர்கள், அபிமானிகளால் தான் நான் இப்படி இருக்கிறேன். என்றென்றும் நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.