26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு |

கார்த்திக் கொன்சால்வெஸ் இயக்கிய 'த எலிபென்ட் விஸ்பரர்ஸ்' என்ற தமிழ் டாகுமென்டரி குறும்படம், 95வது ஆஸ்கர் விருதுகளில் 'சிறந்த டாகுமென்டரி குறும்படத்திற்கான' விருதை வென்றது. அந்தப் படம் ஆஸ்கர் விருதை வென்ற பிறகுதான் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் அப்படம் வெளியானது. வழக்கம் போல அதையும் ஏதோ ஒரு குறும்படம் என்றுதான் சிலர் நினைத்தார்கள். ஆனால், ஆஸ்கர் விருதை வென்ற பிறகு அந்தப் படம் பற்றிய தகவல்களும், செய்திகளும், பெண் இயக்குனர் இயக்கி, பெண் தயாரிப்பாளர் தயாரித்த படம் என்பது பலரிடமும் போய்ச் சென்றது.
தற்போது படத்தை அதிகம் பேர் பார்த்து வருவதாகத் தெரிகிறது. தமிழ் நடிகர் கார்த்தி கூட ஆஸ்கர் விருதுக்குப் பிறகு படத்தைக் குழந்தைகளுடன் பார்த்தேன் எனக் குறிப்பிட்டு படத்தைப் பாராட்டியுள்ளார். “அகாடமி விருதுக்குப் பிறகு 'த எலிபென்ட் விஸ்பரர்ஸ்' படத்தைக் குழந்தைகளுடன் பார்த்தேன். நானும் ஒரு குழந்தையைப் போல மகிழ்ச்சி அடைந்தேன். இயற்கையையும், வனவிலங்குகளையும், பாதுகாக்கும் மற்றும் பராமரிக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள். அந்த அழகான மனிதர்களுக்குப் பெருமை சேர்த்த இயக்குனர் கார்த்திகிக்கு நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.




