ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி | தேங்கி கிடந்த 'சுமோ' ஏப்., 25ம் தேதி திரைக்கு வருகிறார் | பெல்ஜியம் கார் ரேஸ் : இரண்டாம் இடம் பிடித்த அஜித் அணி |
தமிழ் சினிமாவில் சந்தானம் காலத்திற்கு முன்பு தமிழ் சினிமா நகைச்சுவையில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்திருந்தவர் மறைந்த நடிகர் விவேக். அவருடைய படங்களில் பல சமூகக் கருத்துக்களை நகைச்சுவை கலந்து சொல்லியவர்.
நேற்று ஆஸ்கர் விருது வழங்கப்பட்ட நாளில் திடீரென விவேக் பற்றிய ஒரு நினைவுப் பகிர்வை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கிய இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான். அதிலும் யாரோ ஒரு அஜித் ரசிகர் விஜயகாந்த், விவேக் நடித்த 'விஸ்வநாதன் ராமமூர்த்தி' படத்தின் காட்சி ஒன்றை வீடியோவாகப் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவைப் பகிர்ந்த ரசிகர் அதில், “தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா” என்று பதிவிட்டிருந்தார்.
அந்த வீடியோவை ரீடுவீட் செய்து ஏஆர் ரஹ்மான், “காமெடி சாதனையாளர் விவேக்கை மிஸ் செய்கிறோம், மாபெரும் இழப்பு,” எனக் குறிப்பிட்டுள்ளார். எந்த ஒரு சம்பந்தமும் இல்லாமல் திடீரென விவேக் பற்றி ஏஆர் ரஹ்மான் பதிவிட்டது குறித்து கமெண்ட் பகுதியில் ரசிகர்கள் பலரும் பலவிதமாக கமெண்ட் செய்துள்ளார்கள்.
ஆஸ்கர் விருது வென்ற பின் இசையமைப்பாளர் கீரவாணி நேற்று ஆங்கிலத்தில்தான் பேசினார். ஒரு வார்த்தை கூட அவர் தெலுங்கில் பேசவில்லை. அதைக் குறித்து தாய்மொழியின் பெருமையைப் பற்றிப் பேச வேண்டும் என மறைமுகமாக ஏஆர் ரஹ்மான் பதிவிட்டுள்ளாரா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
ஏஆர் ரஹ்மான் ஆஸ்கர் விருது வென்ற போது கடைசியில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என தமிழில் குறிப்பிட்டுப் பேசினார்.