26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு |

சிம்பு கதாநாயகனாக நடித்துள்ள 'பத்து தல' படம் இந்த மாதம் 30ம் தேதி வெளியாக உள்ளது. அதற்கடுத்து அவர் நடிக்க உள்ள படத்தின் அறிவிப்பு இன்று மாலை வெளியாக உள்ளது. நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் அப்படத்தை தயாரிக்க உள்ளது. 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி படத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் அறிவிப்பு இன்று மாலை 6.30க்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இன்றைய அறிவிப்பு பற்றி நேற்றே டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் படத் தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அவர்களது 6வது தயாரிப்பு பற்றிய அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என சற்று முன் அறிவித்துள்ளார்கள். இது சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கும் படமா அல்லது தயாரிக்கும் படமா என்பது அறிவிப்பு வரும் போது தெரியும்.
சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் 'மாவீரன்' படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது. அதற்கடுத்து ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ள படத்தில் நடிக்க உள்ளார். அந்தப் படம் ஆரம்பிப்பதற்குள் அடுத்த பட அறிவிப்பை வெளியிடுவாரா என்பது சந்தேகம்தான்.




