டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை |

தயாரிப்பாளர் வி. ஏ. துரை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு பணமில்லாமல் அவதிப்பட்டு வருகிறார். என்னம்மா கண்ணு, பிதாமகன், லூட்டி, கஜேந்திரா உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் வி.ஏ.துரை. ரஜினியின் பாபா படத்தில் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றியவர். மனைவி, மகளை பிரிந்து வாழும் அவர் தற்போது விருகம்பாக்கத்தில் உள்ள வீடு ஒன்றில் தனியாக வசித்து வருகிறார்.
இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் உதவியால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர் எழுந்து உட்காரும் அளவிற்கு உடல்நலம் தேறியிருக்கிறார். ஆனால் தற்போது அன்றாட மருத்துவ செலவுகளுக்கே பணமில்லாமல் தவித்து வருகிறார். சமீபத்தில் அவருக்கு நடிகர் சூர்யா ரூ 2 லட்சம் பணம் கொடுத்து உதவியதாக தகவல் வெளியானது. அதேபோல நடிகர் கருணாஸ் ரூ 50 ஆயிரம் பணம் கொடுத்து உதவியுள்ளார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவரை போனில் தொடர்பு கொண்டு "நீங்கள் எதை பற்றியும் கவலைப்படாதிருங்கள். மொத்த செலவையும் நான் பார்த்து கொள்கிறேன். ஜெயிலர் படத்தை முடித்ததும் நேரில் வந்து பார்க்கிறேன்'' என உறுதி அளித்துள்ளாராம். இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.




