பிளாஷ்பேக்: ஈர்ப்புள்ள பாரதியாரின் பாடல்களும், இணையற்ற ஏ வி எம்மின் “நாம் இருவர்” திரைப்படமும் | கமலை சந்தித்த 'உசுரே' படக்குழுவினர்: பிக்பாஸ் பாசத்தில் ஜனனி ஏற்பாடு | 'மிஸ்டர் ஜூ கீப்பர், அடங்காதே' இந்தமுறையாவது சொன்னபடி வெளியாகுமா? | வடிவேலுக்கு இந்த நிலையா?: மாரீசன் காட்சிகள் ரத்தான பரிதாபம் | திருமணம் எப்போது? விஜய்தேவரகொண்டா பதில் இதுதான் | சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! |
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க 'வாடிவாசல்' படம் தயாராகும் என 2021ம் ஆண்டே அறிவிக்கப்பட்டது. அந்த ஆண்டில் படத்தின் டைட்டில் போஸ்டரையும் வெளியிட்டார்கள். அப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு வருடங்களாகியும் இன்னும் ஆரம்பமாகாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.
கடந்த வருடம் இப்படத்திற்கான டெஸ்ட் ஷுட்களைக் கூட நடத்தினார்கள். படத்திற்காக ஜல்லிக்கட்டு காளை ஒன்றை சூர்யா சொந்தமாக வாங்கி வளர்க்கிறார் என்றும் தகவல் வெளியானது. ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக வெற்றிமாறன் 'விடுதலை' படத்திற்காக மட்டுமே பணிபுரிந்து வந்தார். அப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது.
நேற்று அப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது பேசிய வெற்றிமாறன், 'விடுதலை படத்தின் இரண்டு பாகங்கள் வெளியானதும் 'வாடிவாசல்' படத்தை ஆரம்பிக்க உள்ளோம். அதற்குப் பிறகு 'வட சென்னை 2' படத்தை இயக்குவேன்,” என அறிவித்தார்.
மார்ச் மாதம் 30ம் தேதி 'விடுதலை' படத்தின் முதல் பாகம் வெளியாக உள்ளது. அதற்குப் பின் ஆறு மாதங்கள் கழித்து இரண்டாம் பாகம் வெளியாகலாம். எப்படியும் இந்த வருட இறுதிக்குள் 'வாடிவாசல்' ஆரம்பமாக வாய்ப்புள்ளது. படம், இரண்டு வருடங்களாகியும் ஆரம்பமாகாமல் இருப்பதால் புதிய அப்டேட்டைக் கேட்டு சூர்யா ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளார்கள்.