300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மணிரத்னம் இயக்கத்தில் வரலாற்று படமாக உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே பாகுபலி படத்தின் இரண்டு பாகங்கள் வெற்றி பெற்ற நிலையில். பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கும் முதல் பாகத்தைப் போல வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி வரலாற்று படங்களுக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் அபரிமிதமான வசூலும் கிடைத்து வருவதால் கடந்த 2018ல் தான் துவங்கிய வரலாற்று படமான சங்கமித்ராவை மீண்டும் துவங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம் இயக்குனர் சுந்தர்.சி. ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் இந்த படம் கிட்டத்தட்ட 450 கோடி பட்ஜெட்டில் உருவாக இருந்ததாக அப்போது சொல்லப்பட்டது. பட்ஜெட் உள்ளிட்ட சில காரணங்களால் இந்த படம் கைவிடப்பட்டதாக சொல்லப்பட்டது.
இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்த ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்தில் இதேபோன்று வரலாற்று கதாபாத்திரத்தில் நடித்து விட்டதால் சங்கமித்ரா படத்தில் இனி அவர் நடிக்க வாய்ப்பு இல்லை என்றும் அவருக்கு பதிலாக அதே அளவு உயரம், ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட விஷாலை வைத்து இந்த படத்தை சுந்தர் சி மீண்டும் துவங்க இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
ஏற்கனவே மதகஜராஜா, ஆம்பள, ஆக்சன் என மூன்று படங்களில் சுந்தர்.சியுடன் இணைந்து பணியாற்றியுள்ளார் விஷால். அதுமட்டுமல்ல இந்த படத்தை தயாரிப்பதாக அறிவித்திருந்த தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இன்னொரு மிகப்பெரிய நிறுவனமும் கைகோர்த்து இந்த படத்தை துவங்க இருக்கிறார்கள் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது. காபி வித் காதல் படத்திற்கு பிறகு சுந்தர்.சி தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை. அநேகமாக இந்த சங்கமித்ரா குறித்த அறிவிப்பே கூட அவரிடம் இருந்து விரைவில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.