பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

‛உயிருள்ளவரை உஷா' ரீ-ரிலீஸ் பிரஸ்மீட்டில் பேசிய டி.ராஜேந்தர் அந்த காலத்தில் படங்களில் நல்ல காமெடி இருந்தது. திறமையான காமெடி நடிகர்கள் இருந்தனர். உயிருள்ளவரை உஷா படத்தில் கூட கவுண்டமணி, வெண்ணிற ஆடை மூர்த்தி நடித்தனர். அடுத்து நான் இயக்கும் படத்தில் சில காமெடியன்களை அறிமுகப்படுத்த போகிறேன் என்றார்.
இது உண்மைதான் தமிழ் சினிமாவில் காமெடி பஞ்சம் இருக்கிறது. இப்பவெல்லாம் வயிறு வலிக்க ஏன் மனம் விட்டு கூட சிரிக்கிற காமெடி வருவது இல்லை. விவேக், மனோ பாலா போன்றவர்கள் காலமாகிவிட்டார்கள். கவுண்டமணி, செந்தில் நடிப்பது இல்லை. வடிவேலு கதை நாயகனாக நடிப்பதில் ஆர்வம் காண்பிக்கிறார். அவர் காமெடியும் முன்போல இல்லை. சூரி, சந்தானம் ஹீரோ ஆகிவிட்டார்கள். சதீஷ் கூட அந்த வழியில் செல்கிறார்.
கருணாகரன், ரோபோ சங்கர், ரமேஷ் திலக், சாம்ஸ் போன்றவர்கள் தவிக்கிறார்கள். மொட்ட ராஜேந்திரன் பீல்ட் அவுட் ஆகிவிட்டார். இப்போது இருக்கிற பெரிய காமெடியன் யோகிபாபு மட்டுமே. அவரும் பெரிய சிரிப்பை தருவதில்லை. கடந்த சில ஆண்டுகளில் பெயர் சொல்லும் காமெடிகள் உருவாகவில்லை. டி.ஆர்.சொன்னது மாதிரி கோலிவுட்டில் திறமையான காமெடியன்கள், நல்ல காமெடி படங்கள் இல்லாமல் வறட்சியில் தவிக்குது தமிழ் சினிமா என்கிறார்கள்.